• May 03 2024

மன்னிப்பு கேட்காமல் படத்திலிருந்து விலகிய பிரபல நடிகை…காலம் கடந்தும் பேசப்பட்டு வரும் சம்பவம்

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாத் திரையுலகில் 'நடிப்புச் சக்கரவர்த்தி' என்று ரசிகர்களால் சிறப்பாகப் போற்றப்பட்டு வருபவரே நடிகர் சிவாஜி கணேசன். இவர் தற்போது மண்ணுலகில் இல்லை என்றாலும் இன்றும் இவரை பலரும் நினைவு கூர்ந்து வருகின்றனர்.

சினிமாத்துறையில் ரசிகர்களிடம் மட்டுமன்றி திரைப்பிரபலங்கள் மத்தியிலும் இவருக்கென்று தனி மரியாதை உண்டு. அப்படிப்பட்ட நம்ம சிவாஜி கணேசனை நடிகை ஒருவர் அவமானப் படுத்தியிருப்பதாகக் கூறப்படுகின்றது.

அதாவது கிட்டத்தட்ட பல ஆண்டுகளுக்கு முன்பு அதாவது சிவாஜி கணேசன் பல திரைப்படங்களில் மிகவும் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாகக் கூறப்படுகின்றது.

அதாவது இவர் 'சிவகாமியின் செல்வன்' என்ற படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது அப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடிகை வெண்ணிற ஆடை நிர்மலாவும் நடிப்பதற்காக ஒப்பந்தமாகி இருந்தார். இந்த நிலையில் குறிப்பிட்ட திகதியில் சூட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டிய அவர் காலதாமதமாகவே சூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் படக்குழுவினருக்கு ஏற்கெனவே கூறியிருக்கின்றார். அதாவது அவர் ஊட்டியில் வேறு ஒரு படப்பிடிப்பில் இருந்ததனால் சரியான நேரத்தில் ரயிலை பிடிக்காமல் தவறவிட்டதாகவும், பிறகு வாடகை கார் மூலம் எப்படியோ சூட்டிங் பாட்டுக்கு வந்து சேர்ந்திருக்கிறேன் எனவும் கூறியிருக்கின்றார்.

இதைக்கேட்ட படக்குழுவினர் சிவாஜி மிகவும் கோபமாக இருக்கின்றார் என்று சிவாஜியிடம் அவரை மன்னிப்பு கேட்கும் படி வற்புறுத்தி இருக்கின்றனர். ஆனால் அதற்கு அவரோ "நான் தாமதமாக வந்தமைக்கான காரணத்தை முன்பே சிவாஜி சாரிடம் தெரிவித்துவிட்டேன். பின்னர் எதற்காக நான் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று கூறியிருக்கிறார்.

அதற்கு படப்பிடிப்பில் இருந்த அனைவரும் மன்னிப்பு கேட்காது விட்டால் நீங்கள் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கண்டிப்புடன் கூறி இருக்கிறார்கள். இதனால் கோபமடைந்த வெண்ணிற ஆடை நிர்மலா "நான் தப்பு செய்யவில்லை, அதனால் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது, வேண்டுமென்றால் படத்தில் இருந்து விலகுகிறேன்" என்று கொஞ்சம் கூட யோசிக்காமல் அவர்கள் முகத்தில் அடித்தால் போல் பதில் கூறி இருக்கின்றார். அதனைத் தொடர்ந்து அவர் படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் அந்த இடத்தை விட்டு வெளியேறி இருக்கிறார்.

இதனால் அவர் சிவாஜியை அவமானப்படுத்தி விட்டதாக ஒரு செய்தி அப்போது திரையுலகில் பிரபலங்கள் பலராலும் பரபரப்பாக பேசப்பட்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இத்தனை ஆண்டுகள் கடந்தும் இந்த சம்பவம் பலராலும் பேசப்பட்டு வரினும் ஒரு சிலர் நிர்மலா மேல் தப்பு சொல்லாது அமைதியாக விலகி சென்றமை அவரின் நன்னடத்தைக்கு எடுத்துக்காட்டு என்று புகழ்ந்து வருகின்றார்கள்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement