• Sep 17 2024

ரோகிணி தலையில் விழுந்த பேரிடி.. மீனா போட்டுக் கொடுத்த மாஸ்டர் பிளான்?

Aathira / 1 week ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில், அண்ணாமலை முத்துவிடம் எதற்காக இப்படி சண்டை போட்டுக் கொள்கின்றீர்கள்? எனக்கு அடுத்ததாக மீனா தான் இந்த குடும்பத்தில் எந்த பிரச்சனையும் வராமல் பார்த்துக் கொண்டா.. இப்போ மீனாவே சண்டை போடுற மாதிரி இருக்குது என்று முத்துவிடம் கேட்க, அதற்கு இது எல்லாம் சும்மா டிராமா அம்மாவுக்காக பண்ணினது என்று சொல்கின்றார்.

அதாவது ஸ்ருதியின் அம்மா மீனாவுக்கு பேசியதாகவும் அதற்கு காரணம் அம்மா தான் என்றும் காரின் வரும்போது மீனா இதையெல்லாம் சமாளிக்க வேண்டும் என்றால் பொய்யாக நானும் ஸ்ருதியும் சண்டை போட்டது போல நடிக்க வேண்டும் என்று சொல்லுகின்றார். அதன்படியே ஸ்ருதிக்கு போன் பண்ணி சொல்லி பொய்யாக சண்டை போட்டுக் கொள்கிறார்கள்.

அதற்கு அண்ணாமலை புத்திசாலித்தனமா செய்றம் என்று எதுவும் பெரிய பிரச்சனை வராத மாதிரி பார்த்துக் கொள் என்று முத்துவுக்கு அட்வைஸ் பண்ணி செல்கின்றார்.


அதற்கு பின்பு ஸ்ருதி தனது அம்மாவுக்கும் போன் பண்ணி ஏன் இப்படி எல்லாம் பண்ணுறீங்க? நான் இப்போ ரவிட பொண்டாட்டி. இதுதான் என்னுடைய வீடு என்று  திட்டி விட்டு ஃபோனை வைக்கின்றார்.

இதைத்தொடர்ந்து ரோகிணி அம்மாவை பார்ப்பதற்காக ரோகினி ஹாஸ்பிடல் செல்கின்றார். அங்கு அவருக்கு மைனர் அட்டாக் வந்ததாக மருத்துவர் சொல்லவும், க்ரிஷ் தங்களுடனே இருக்குமாறு ரோகிணியை கேட்டுக் கொள்கின்றார்கள். இதுதான் இன்றைய எபிசோட்  

Advertisement

Advertisement