• Mar 13 2026

"சப்தம்" ஒலி அடிப்படையிலான பேய்ப்படமா...? பாராட்டித் தள்ளிய இயக்குநர்!

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் ஒரு புதிய முயற்சியாக உருவான சப்தம் திரைப்படம் சமீபத்தில் திரைக்கு வந்திருந்தது. இயக்குநர் அறிவழகன் இயக்கிய இப்படத்தில் நடிகர் ஆதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒலி மற்றும் அதனுடன் தொடர்புடைய அமானுஷ்ய நிகழ்வுகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள சப்தம் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய அணுகுமுறையாக கருதப்படுகிறது. இப்படம் வெளியானதிலிருந்து பாராட்டுக்களும், விமர்சனங்களும் பெருகிக் கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பிரபல இயக்குநர் சங்கர் இப்படத்தை பாராட்டியுள்ளார். அவர் கூறுகையில், "ஒலியுடன் தொடர்புடைய ஒரு பேய்ப்படம் தமிழில் பார்ப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இது ஒரு புதிய முயற்சி என்றதுடன் இயக்குநர் அறிவழகன் இப்படத்தை மிகவும் சிறப்பாக உருவாக்கியுள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.


சப்தம் திரைப்படத்தில் வெவ்வேறு சிந்தனை கொண்ட கதாநாயகனாக நடிகர் ஆதி நடித்துள்ளார். படத்தின் கதையில் ஒலி மற்றும் அதனுடன் தொடர்புடைய மிரள வைக்கும் சம்பவங்கள் இடம்பெறுகின்றன. சினிமா ரசிகர்கள் சாதாரணமான பேய்ப்படங்களை பார்த்திருப்பார்கள், ஆனால் ஒலி சார்ந்த பயங்கரமான பேய்ப்படங்களைப் பார்த்திருக்க மாட்டார்கள் என்றார்.

இயக்குநர் சங்கர் போன்ற பிரபலமான இயக்குநர் பாராட்டியதன் மூலம், சப்தம் திரைப்படம் மேலும் பெரும் அங்கீகாரம் பெற்றுள்ளது. ஒலியை மையமாகக் கொண்டு பயம் உருவாக்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளதுடன் நடிகர் ஆதியின் நடிப்பு மற்றும் தமன் இசை என்பன பயத்தை உணர வைத்துள்ளது. இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு புதிய முயற்சியாகவும், பயங்கர கதைகளுக்கான ஒரு புதிய பாதையாகவும் திகழ்கிறது.

Advertisement

Advertisement