• Jun 04 2025

பாக்கியாவோட இணைவதற்கு மாஸ்டர் பிளான் பண்ணும் கோபி.! விடாமல் பிரச்சனை செய்யும் கவுன்சிலர்!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலில் இன்று, கோபி பாக்கியான்ட ஹோட்டலுக்குப் போய் நிற்கிறார். அதைப் பார்த்த பாக்கியா என்ன விஷயமா இங்க வந்தனீங்க என்று கேக்கிறார்.அதுக்கு கோபி காலையில இருந்து பயங்கரமா தலை வலிக்குது அதுதான் உன்ர ஹோட்டலுக்கு வந்து ஒரு tablet வாங்கிட்டுப் போக வந்தேன் என்று நக்கலாகச் சொல்லுறார். மேலும் ஹோட்டலுக்கு எதுக்கு வருவாங்க சாப்பிடத் தானே என்று சொல்லுறார். அதைக் கேட்ட பாக்கியா என்ன சாப்பிடப் போறீங்க என்று கேக்கிறார். 

அதனை அடுத்து பாக்கியா நீங்க சாப்பிட வரேல என்று எனக்குத் தெரியும் எதுக்காக வந்தனீங்க என்று சொல்லுங்க என்கிறார். அதுக்கு கோபி இனி யார் இந்த ஹோட்டலுக்கு வந்து பிரச்சனை பண்ணுறாங்கனு நான் பாக்கிறேன் என்கிறார். அதைக் கேட்ட பாக்கியா ஏதாவது பிரச்சனை வந்தால் நானே பாத்துப்பேன் நீங்க கிளம்புங்க என்று சொல்லுறார். பின் கோபி அப்புடி எல்லாம் விட்டுட்டுப் போகேலாது என்கிறார்.


இதனைத் தொடர்ந்து அங்க கவுன்சிலர் வந்து அமைச்சர் வரைக்கும் போய் என்னமோ எல்லாம் பண்ணி உங்க பையனை வெளில கொண்டுவந்து ஹோட்டலையும் திறந்திட்டீங்க உண்மையிலேயே நீங்க பெரிய ஆளு தான் என்று பாக்கியாவப் பாத்துச் சொல்லுறார். மேலும் நாங்க இங்க பிரச்சனை பண்ண வரேல மேடம் சாப்பிடத் தான் வந்தனாங்க என்கிறார்.

அதனை அடுத்து கோபி இப்ப சாப்பிட எதுவும் இல்ல என்று சொன்னதைக் கேட்ட கவுன்சிலர் கொஞ்ச நேரம் ஜோசிச்சிட்டு இப்ப போறன் திரும்ப வருவன் என்கிறார். பின் பாக்கியா உடம்பு வலிக்குது கொஞ்ச நேரம் கீழ படுத்துக்கிறேன் என்று ஈஸ்வரிக்குச் சொல்லுறார். மறுநாள் இனியா சுதாகரைப் பாத்து நேற்று நீங்க சாப்பிடும் போது நான் குரலை உயர்த்திக் கதைச்சிட்டேன் அப்புடி எல்லாம் கதைச்சிருக்க கூடாது என்கிறார். அதைக் கேட்ட சுதாகர் மனைவி இவ்வளவு நேரமும் இங்க தான் இருந்தாரு அப்ப சொல்லாமல் கிளம்புற நேரம் நிறுத்தித் தான் சொல்லனுமா என்று கோபமாக கேட்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.



Advertisement

Advertisement