தமிழ் சினிமாவின் திறமையான நடிகைகளில் ஒருவராக கருதப்படும் அமலா பால், தனது வாழ்க்கையின் புதிய கட்டத்தை சமீபத்தில் பகிர்ந்திருந்தார். கல்யாணம், கர்ப்பம், தாய்மை என வாழ்க்கையின் முக்கியமான பரிமாணங்களை உணர்ச்சிவாய்ந்த முறையில் அனுபவித்த அமலாவின் புது வாழ்க்கையை ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியுடன் வரவேற்று வருகின்றனர்.
அமலா பால் சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில், தனது கணவர் ஜகத் தேசாவை சந்தித்த முதல் மாதத்திலேயே அவர்கள் உறவு புரிந்துவிட்டதாகவும், அதன்பின் அவர் கர்ப்பமாகியதாகவும் கூறியுள்ளார். தன்னைச் சுற்றியுள்ள சிலருக்கு இது எதிர்பாராததாக இருந்தாலும், தங்களுக்குள் இருந்த பாசமும் புரிந்துணர்வும் அவர்களை திருமண முடிவிற்கு கொண்டு சென்றதாகவும் கூறினார் அமலாபால்.
மேலும், அதற்குப் பிறகு தான் நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம். இது திட்டமிடப்பட்டது அல்ல, ஆனால் இயற்கை வழியில் நடந்த கதை எனவும் தெரிவித்தார். அமலா பால் மற்றும் ஜகத் தேசா தம்பதிகளுக்கு பிறந்த மகனுக்கு "இலை" என்று பெயரிட்டுள்ளனர். இந்தத் தாய்மையின் அனுபவம் தான், அமலாவை இன்னும் புதிய மனிதராக மாற்றி இருக்கிறது என்றும் கூறியிருந்தார்.
Listen News!