தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள முன்னணி நடிகர் சூர்யா, தற்போது தனது 47வது திரைப்படத்திற்கு தயாராகி வருகின்றார். இதுவரை அவருடன் இணைந்து பணியாற்றாத ஒரு புதிய இயக்குநருடன் சேரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
மலையாள திரையுலகில் 'ஆவேசம்' ,'ரோமஞ்சம்' போன்ற ஹிட் படங்களை இயக்கிய ஜித்து மாதவன், சூர்யாவின் 47வது படத்திற்கு இயக்குநராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல்கள் தற்போது தமிழ் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகின்றது.
ஜித்து மாதவன், தனது முதல் படமான "ரோமஞ்சம்" மூலம் மலையாள சினிமாவில் பிரமுகர்களின் கவனத்தை ஈர்த்தார். அதனைத் தொடர்ந்து வெளியான "ஆவேசம்" திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
அந்த வெற்றியின் அடிப்படையில், தற்போது அவர் தமிழில் தனது இயக்குநர் வாழ்க்கையின் முதல் படமாக சூர்யா 47ஐ இயக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் திரைக்கதை எழுத்து பணிகள் தொடங்கிய நிலையில், சூர்யாவும், ஜித்து மாதவனும் சில முறை சந்தித்து ஆலோசனைகள் நடத்தியிருக்கிறார்கள். எனினும் அதிகாரபூர்வமான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!