• Sep 17 2024

இயக்குநர் செய்த செயலால் கண்ணீர் விட்டு அழுத நடிகை-செட்டில் பரபரப்பு

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபஞ்ச அழகிப் பட்டம் வென்ற சுஷ்மிதா சென் மகேஷ் பட் இயக்கிய தஸ்தக் படம் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

அந்த படத்திலும் பிரபஞ்ச அழகியாக நடித்திருந்தார். தன் படத்தில் நடிக்குமாறு மகேஷ் பட் கேட்டபோது, எனக்கு நடிக்கத் தெரியாது என்று சுஷ்மிதா கூறியும் அவரை நடிக்க வைத்திருக்கிறார்.

இந்நிலையில் நடிகை ட்விங்கிள் கன்னாவுக்கு அளித்த பேட்டியில் சுஷ்மிதா தெரிவித்ததாவது….

மகேஷ் பட் ஒரு அருமையான இயக்குநர். ஏனென்றால் 40 செய்தியாளர்கள், 20 ப்ரொடக்ஷன் ஆட்கள் முன்பு என்னை விமர்சித்து என் குறிக்கோளை நாசம் செய்தார்.

அந்த சமயம் நான் அழத் துவங்கினேன். எனக்கு தான் நடிக்கத் தெரியாதுனு சொன்னேன்ல என்றேன். மேலும் அதற்கு அவரோ, இந்த பெண்ணுக்கு நடிக்கக் கூட வரல என்றார்.

இதனால் கோபம் அடைந்து செட்டில் இருந்து கிளம்பினேன். அத்தோடு அவர் என்னை கையை பிடித்தார், நான் உதறிவிட்டு சென்றேன். இனி என்னிடம் இப்படி பேசாதீர்கள் என்று கூறிவிட்டு கிளம்பினேன். அவர் என் கையை பிடித்து, இது தான் கோபம், இதை தான் அந்த காட்சியில் காட்ட வேண்டும். போய் நடி என்றார். நானும் நடித்தேன் என்றார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement