விஜய் டிவியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப் போகின்றது என்பதற்கான எபிசோட் வெளியாகியுள்ளது.
அதன்படி இன்றைய எபிசோடில், ரவுடிகளிடம் இருந்து தப்பித்த தமிழ், நேரடியாக ஹாஸ்பிடல்லில் இருக்கும் மேக்னாவை சந்திக்கின்றனர். அவர்களை பார்த்த மேக்னா கத்தி சத்தம் போட பார்க்கிறார். இதற்கு 'நான் எதற்காக வந்தன் என்டு சொல்லிட்டு மட்டும் போரன்' என தன் மீது உள்ள நியாயத்தை கூறுகிறார் தமிழ்.
அதன்படி தமிழ் 'ஒரு பெண்ணா இவ்வளவு இளம் வயதில் 30 கம்பெனிக்கு ஓனராக இருக்கிங்க. அது பெருமையாக இருக்கு. நான் கை நீட்டி அடித்து இருக்கக் கூடாதுதான் ஆனால் அந்த சமயத்தில் என்ன செய்ற என்டு தெரியல. நீங்களும் கொஞ்சம் புடிவாதமாக இருந்தீங்க. அதுமட்டுமில்ல உங்கள காப்பாற்ற தான் புடவையை நான் உருவினேன். நீங்க ஏதும் தப்பா நினைக்காதைங்க' என்று சொல்கிறார்.
இவ்வாறு சொல்லிவிட்டு வெளியே சென்ற தமிழ் மேகனாவின் மாமா களிவரதனிடம் மாட்டிக் கொள்கிறார். உடனே தமிழ் மற்றும் நமச்சி இருவரையும் பிடித்து குடோனில் மீண்டும் கட்டி வைக்கிறார்கள்.
இதையடுத்து, மேக்னாவிடம் பேசிய மாமா 'அவன என்ன பண்ணலாம்' என கேட்க 'அவர விட்டுருங்க, நான் தான் தப்பா நினைச்சுகிட்டேன். அவர் ரொம்ப நல்லவரு என்ன காப்பாத்துனதும் அவர்தான். டாக்டர் சொல்லி தான் எனக்கே தெரியுது. அவர கூட்டிட்டு நம்ம வீட்டுக்கே வாங்க அவருக்கு நான் தேங்க்ஸ் சொல்லணும். அத்தோட உங்க பிரண்டு உமாபதி சொல்லித்தான் அவர் பிசினஸ் விஷயமா பேச வந்திருக்காரு. அதனால நான் தான் அவர்ட மன்னிப்பு கேக்கணும்' என மேக்னா மாமாவிடம் சொல்கிறார்.
இதையடுத்து, தமிழ வச்சி தான் மொத்த சொத்தையும் நம்ம ஆட்டைய போடணும் என கலிவரதனும் அவரின் மகனும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நமச்சியை வைத்து தான் காரியத்தை சாதிக்க முடியும் என எண்ணி நமச்சி அங்கு இருக்கும் பொழுது மேக்னா இவங்களுக்கு கம்பெனியை கொடுப்பாளா இல்லையா என்று தெரியலையே அதுமட்டுமில்லாமல்
ஆனாலும், 'தமிழுக்கு கல்யாணம் ஆயிடுச்சுன்னு சொன்னா மேகனா இவங்களுக்கு கம்பெனியை கொடுப்பாளா? இல்லையா? அவ இளைஞர்களுக்கு மட்டும் தானே ஹெல்ப் பண்ணுவா' என பேசிக் கொண்டிருக்கிறார்கள். இத்துடன் இன்றைய எபிசோடு முடிகிறது.
Listen News!