• Sep 08 2024

“எல்லா கெட்ட வார்த்தைகளிலும் திட்டினாங்க“- மன அழுத்தத்தினால் கண்ணீர் விட்ட நிஷா

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல வருடங்களாக சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் நீயா நானா. இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளர் கோபி நாத் தொகுத்த வழங்கி வருகின்றார்.

ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு தலைப்பின் கீழ் விவாதம் நடப்பதுண்டு. அந்த வகையில் இந்த வாரம் பெண் பிரபலங்கள் மற்றும் அவர்களது கணவர்களுக்கு இடையேயான விவாதம் நடைபெற்றது.

அப்போது நிஷா பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று வந்த பிறகு மன ரீதியாக பாதிக்கப்பட்டதாக அவரது கணவர் கூறினார். ஒரு கேள்வி கேட்டால் அதற்கு பதில் வரவே ஒரு 20 நிமிடங்கள் ஆகிவிடும். அந்த அளவுக்கு இருந்தார். அவரை மருத்துவமனை கூட்டி சென்று சகஜ நிலைக்கு கொண்டு வரவே 30 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டது.

அது பற்றி பேசிய நிஷா "எல்லா கெட்ட வார்த்தைகளிலும் திட்டினாங்க, இனி திட்டவேண்டும் என்றால் புது வார்த்தைகள் தான் கண்டுபிடிக்க வேண்டும். அந்த அளவுக்கு திட்டினாங்க. ஆண்களை திட்ட வேண்டும் என்றால் உடல் பற்றி திட்டுவதில்லை. ஆனால் பெண்களை பற்றி உடலை குறிப்பிட்டு தான் திட்டுகிறார்கள்" என கண்ணீர் விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement