• May 19 2024

மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியத்தின் 75 வது பிறந்த தினத்தில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது வசீகரக் குரலால் பல ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட மூத்த பாடகர் தான் எஸ் பி பாலசுப்ரமணியம். இவர் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு ஹிந்தி மலையாளம் கன்னடம் ஆகிய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களைப் பாடியவர்.

கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பாதிப்பால் நுரையீரல் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது அவரின் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் தீரா துயரத்தை ஏற்படுத்தியது. அவர் மறைந்து ஒரு ஆண்டுக்கும் மேலானாலும், அவ்வப்போது அவர் பற்றிய நினைவுகளைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் வரும் ஜூன் 4 ஆம் தேதி அவரின் 75 ஆவது பிறந்ததினத்தை முன்னிட்டு மிகப்பிரம்மாண்டமான கச்சேரி ஒன்று நடக்க உள்ளது. இந்த கச்சேரியில் பாடகர்கள் எஸ் ஜானகி மற்றும் பி சுசீலா ஆகியோர் கலந்துகொள்ள உள்ளனர்.

அத்தோடு இதில் இசையமைப்பாளர் தேவாவும் கலந்துகொள்கிறார். இந்த கச்சேரி சம்மந்தமான அறிவிப்பை எஸ் பி பி சரண் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement