• May 04 2024

சூர்யாவுடன் இணைந்து சிறுத்தை சிவா செய்த மாஸ்டர் ப்ளான்... அடுத்தடுத்து வெளியாகும் 'சூர்யா 42' அப்டேட்கள்... மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகராக அறிமுகமாகி இன்று பால்லாயிரக்கணக்காக மக்கள் மனங்களில் குடியிருக்கின்ற ஒரு வெற்றி நாயகனே நடிகர் சூர்யா. சமீபகாலமாக இவரின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படங்கள் அனைத்துமே வசூல் ரீதியாக பெரியளவில் சாதனை படைத்து வருவதோடு சூப்பர் ஹிட் வெற்றியினையும் பெற்று வருகின்றன.



அதிலும் சமீபத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் கதாநாயகனாக நடித்து வெளியாகிய 'விக்ரம்' படத்தில் இவர் ரோலக்ஸ் என்னும் கேமியோ ரோலில் நடித்து உலகெங்கிலும் மிகப் பெரிய அளவில் பேசப்படும் நடிகராக மாறியுள்ளார். 


அத்தோடு 'சூரரைப் போற்று, ஜெய் பீம்' என வரிசையாக சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சூர்யா அடுத்ததாக 'வணங்கான்' படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். பாலா இயக்கும் இப்படத்தில் நடிகர் சூர்யா மீனவராக நடித்து வந்தார். இப்படத்தினுடைய முதற்கட்ட ஷூட்டிங் மட்டுமே முடிந்துள்ள நிலையில் இப்படத்தை கிடப்பில் போட்டுவிட்டு அடுத்த படத்தில் காலடி எடுத்து வைத்து விட்டார் நம்ம சூர்யா.



அந்தவகையில் இவர் தற்போது இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 42' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு நேற்று பூஜை போடப்பட்டது. யுவி கிரியேசன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கும் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.


இப்படத்தின் பூஜை போடப்பட்ட நிலையில் இன்றைய தினம் ஷூட்டிங் தொடங்கப்பட்டு உள்ளது. இதையொட்டி இப்படம் குறித்த அடுக்கடுக்கான அப்டேட்டுகளும் வெளியாகி வண்ணமே உள்ளன. அதன்படி 'சூர்யா 42' திரைப்படம் தமிழில் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம், மராத்தி, பெங்காலி, ஒரியா உட்பட 10 மொழிகளில் வெளியிடப்பட உள்ளதாகக் கூறப்படுகின்றது.



அதுமட்டுமல்லாது இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் நடைபெற உள்ளதாகவும், அங்கு 10 நாட்களில் முதற்கட்ட ஷூட்டிங்கை முடித்த பின்னர் செப்டம்பர் மாதம் கோவா செல்ல உள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்தோடு படக்குழுவினர் அங்கு ஒரே கட்டமாக 25 நாட்கள் தொடர்ந்து ஷூட்டிங் நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். 


அதுமட்டுமின்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் இப்படத்தின் ப்ரோமோஷன் போஸ்டரை அடுத்த வாரம் வெளியிட உள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதனுடன் இணைந்த வகையில் இப்படத்தின் டைட்டிலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இவ்வாறாக 'சூர்யா 42' குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளிவருவதால் நம்ம சூர்யா ரசிகர்கள் மிகுந்த குஷியோடு இருந்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement