இயக்குநர் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் நடிகர் நாகசைத்தன்யா தமிழில் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் தான் ’NC 22’. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா மற்றும் ‘ அவரது மகனான யுவன் ஷங்கர் ராஜா இருவரும் இசையமைத்துள்ளனர்.
ஆக்ஷன் எண்டர்டெயினராக உருவாகி வரக்கூடிய இந்தப் படத்தில் இணைந்துள்ள நடிகர்கள் குறித்தான அறிவிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டு படத்தின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்தது.
தற்போது இந்தப் படத்தின் முக்கியமான ஷெட்யூல் மைசூரில் முடிவந்துள்ளது. இதில் நடிகர் நாகசைதன்யாவும் பங்கேற்றிருக்கிறார். மைசூரின் அழகிய இடங்கள் இடங்களை சுற்றி இந்தபடத்தின் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு இந்தப் படத்தில் நாகசைதன்யா முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்து வருகிறார். மேலும், அவரது சினிமா பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டு வரக்கூடிய படமும் இதுதான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!