தலைநகரம் என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி இன்று முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம்வருபவர் நடிகர் சுந்தர். சி. இவர் இது வரையில் பல படங்களை இயக்கியுள்ளார்.
அந்தவகையில் தமிழ் சினிமாவில் நகைச்சுவை படங்கள் என்று ஒரு தனி வகையை தாண்டி நகைச்சுவையை பிரதானமாகக் கொண்டு வெகுஜனப் படங்கள் எனும் வகையும் உள்ளது.1990- களுக்கு பின்பு இந்த வகையை பிரபல்யப்படுத்தியவர் என்பதுதான் இயக்குநர் சுந்தர். சி-இன் அடையாளம்.
சுந்தர். சி-இன் இயக்கத்தில் மிக பெரிய வெற்றி படமான கலகலப்பு திரைப்படத்திற்கு பின்பு இவரது காமெடியில் சரவெடியில் உருவான தீயா வேலை செய்யணும் குமாரு, அரண்மனை 1, அரண்மனை 2, கலகலப்பு 2, ஆகிய திரைப்படங்கள் வணிக ரீதியாக பெரும் வெற்றி பெற்றவை.
காமெடி படங்களை கொடுத்த இயக்குநர் சுந்தர். சி சில ஆண்டுகளாக பேய் படங்களை எடுத்தார்.இந்நிலையில் சுந்தர்.சி மீண்டும் தன்னுடைய பழைய ரூட்டுக்கே திரும்பியுள்ளார். இந்நிலையில் சென்னையில் தொடங்கிய படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது. இந்த படத்தில் ஜீவா, ஜெய் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகிய மூன்று ஹீரோக்களை வைத்து ஒரு காமெடி படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் மேலும் யோகி பாபு, திவ்ய தர்ஷினி ஆகியோரும் நடித்துள்ளனர்.
இதையடுத்து இப்படத்தின் தலைப்பு அறிவிக்கப்படுள்ளது. படத்துக்கு காஃபி வித் காதல் என்று தலைப்பு வைத்துள்ளனர். தலைப்போடு படத்தின் கலர்புல்லான பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகியுள்ளது.
Listen News!