சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'கூலி' திரைப்படம் கடந்த வியாழக்கிழமை (15 ஆகஸ்ட்) உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான இப்படம் வெளியான சில நாட்களிலேயே ரூ.400 கோடி வசூலை கடந்துள்ள நிலையில், சாதனை முறையிலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
'கூலி' திரைப்படத்திற்கு சிப்எஃப்சி (CBFC) A சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனால் பெண்கள் தங்களது குழந்தைகளுடன் தியேட்டருக்கு வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக சில புகார்கள் எழுந்துள்ளன. இதனை தொடர்ந்து, சன் பிக்சர்ஸ் நிறுவனம், இப்படத்திற்கு U/A சான்றிதழ் வழங்கி, குடும்ப ரசிகர்களும் திரையரங்கில் படம் பார்க்கும் வகையில் அனுமதிக்க வேண்டும் எனக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளது.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் சன் பிக்சர்ஸ் கேட்டுள்ளது. தற்போது ‘A’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதற்கான காரணமாக, திரைப்படத்தில் அதிக வன்முறை காணப்படுவது முக்கிய காரணம் என தணிக்கை குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்த வழக்கு விசாரணை எப்போது நடைபெறும், சான்றிதழ் மாற்றம் பெறுமா என்பது குறித்த விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!