நடிகர் விஜய் தற்பொழுது இயக்குநர் வம்சி இயக்கத்தில் வாரிசு என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தினை தயாரிப்பாளர் தில் ராஜு இயக்கி வருவதோடு தமன் இப்படத்திற்கு இசையமைக்கின்றார்.இப்படத்தின் ஷூட்டிங் தற்போது, ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
மேலும் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், தற்போது அடுத்தக்கட்ட ஷூட்டிங் நடந்து வருகிறது.இந்த நிலையில் வரும் தீபாவளி பண்டிகையொட்டி, வாரிசு படத்தின் முதல் சிங்கிளை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றது.
ஏற்கனவே இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் வரும் அக்டோபர் 23 ஆம் தேதி மாலை யில் வாரிசு படத்தின் முதல் சிங்கிலான ரஞ்சிதமே என்ற பாடல் ரிலீஸாக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
எனவே இதுகுறித்து ஓரிரண்டு நாட்களில் படக்குழு அறிவிக்கலாம் என இணையதளத்தில் தகவல்கள் கசியும் நிலையில், நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் தன் டுவிட்டர் பக்கத்தில், இந்த வாரம் வாரிசு அப்டேட் வாரம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, நிச்சயமாக தீபாவளியை முன்னிட்டு ரசிகர்களுக்கு புதிய போஸ்டர்களுடன் வாரிசு பட முதல் சிங்கில் வெளியாகி மகிழ்ச்சியை ஏற்படுத்துவது உறுதியாகியுள்ளது.மேலும் படம் வருகின்ற பொங்கலுக்கு வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!