• May 18 2024

7 ஆண்டுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுக்கும் எஸ்.ஜே. சூர்யா-பெரும் ஆராவாரத்தில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

எஸ்.ஜே. சூர்யா என்ற திரைப்பெயர் கொண்ட எஸ். ஜஸ்டின் செல்வராஜ் ஓர் இந்திய திரைப்பட இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் என பல்வேறு திறமைகளை தன் வசம் கொண்டலர். தமிழ், திரைப்படத்துறையான கோலிவுட்டில் புகழ்பெற்ற இயக்குநரும் ஆவார்.

அந்தவகையில் எஸ்.ஜே. சூர்யாவின் இயக்கத்தின் முதல் திரைப்படம் வாலி பெரும் வெற்றிகண்டது.அடுத்து வந்த குஷி, அதன் பின்பு நியூ, அன்பே ஆருயிரே போன்ற பல படங்களை தயாரித்துள்ளார்.

மகா நடிகன், வியாபாரி,கள்வனின் காதலி, நண்பன் போன்ற படங்களில் கதாநாயகனாகவும்,சிறிய வேடம் கொண்ட கதாப்பாத்திரத்திலும் நடித்து தன் நடிப்புத்திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார் .
திரையுலகை விட்டு சற்று தொலைவிலிருந்த எஸ்.ஜே.சூர்யா நீண்ட இடைவேளைக்கு பின்பு இசை என்ற படத்தை எழுதி, இயக்கி, இசையமைத்து, நடித்துள்ளார்.

ஹீரோ வேடத்தில் நடித்த எஸ்.ஜே. சூர்யா மெர்சல், ஸ்பைடர் , மாநாடு போன்ற படங்களில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து டான் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு சினிமாத்துறையில் தன் நடிப்பை வெளிப்படுத்திய ஸ்.ஜே.சூரியா கடந்த 7 ஆண்டுகளாக படம் இயக்குவதில் ஆர்வம் செலுத்தவில்லை

இந்நிலையில் நடிகர் எஸ். ஜே. சூர்யா 7 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநராக அவதாரம் எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புதிய படம் காரை மையமாக வைத்து உருவாக உள்ளதாகவும், இதற்காக ஜெர்மெனியில் இருந்து புதிய கார் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, இது தொடர்பான தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement