• May 18 2024

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஞானவேல் இயக்கத்தில் சூர்யா நடித்த ஜெய்பீம் படம் அமேசான் பிரைமில் வெளியானது. மேலும் அந்த படத்தில் லிஜோமோல் ஜோஸ் நடித்திருந்த விதத்தை பார்த்து பலரும் பாராட்டினார்கள்.

பல்வேறு சர்ச்சைகளில் ஜெய்பீம் சிக்கியபோதிலும் பாராட்டுகளும் பெற்றது என்று தான் கூற வேண்டும்.இந்நிலையில் பாஸ்டன் சர்வதேச திரைப்பட விழாவில் ஜெய்பீம் படத்திற்கு இரண்டு விருதுகள் கிடைத்திருக்கிறது என தகவல் வெளியாகி உள்ளது.

director Tamizh.

சிறந்த நடிகைக்கான விருது லிஜோமோல் ஜோஸுக்கும், சிறந்த ஒளிப்பதிவாளனருக்கான விருது எஸ்.ஆர். கதிருக்கும் கிடைத்திருக்கின்றது.

ஜெய்பீம் படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெருமை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும் இதற்கிடையே ஜெய்பீம் படத்தில் உள்நோக்கத்துடன் காட்சிகள் வைக்கப்பட்டுள்ளது என்று கூறி சூர்யா, ஜோதிகா, ஞானவேல் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு ருத்திர வன்னிய சேனா அமைப்பு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

மேலும் அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றமோ, ஜெய்பீம் படத்தின் தயாரிப்பாளர்களான சூர்யா, ஜோதிகா மற்றும் இயக்குநர் ஞானவேல் மீது வழக்குப்பதிவு செய்யுமாறு உத்தரவிட்ட செய்தி அண்மையில் தீயாய் பரவி இருந்தது.

படத்தில் அக்னிச் சட்டி படம் கொண்ட காலண்டர் இருந்தது. இது வன்னியர் சமூகத்தை அவமதிப்பது போன்று இருக்கிறது என்று புகார் எழுந்தது. இதையடுத்து அந்த காட்சியை நீக்கினார்கள். வன்னியர் சமூகத்தினரின் மனதை புண்படுத்தியதற்காக சூர்யா ரூ. 5 கோடி கொடுக்க வேண்டும் என்று கேட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement