• Sep 28 2024

’சிறகடிக்க ஆசை’ ரோகிணிக்கு இவ்வளவு பெரிய மகன் இருக்கிறாரா? குடும்ப புகைப்படம் வைரல்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’சிறகடிக்க ஆசை’ சீரியல் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது என்பதும் குறிப்பாக மீனா, ரோகிணி, ஸ்ருதி, விஜயா ஆகிய 4 லேடி கேரக்டர்கள் தான் இந்த சீரியலுக்கு 4 தூண்கள் போல் உள்ளனர் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகைகளின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தங்களது உண்மையான குடும்பத்தின் புகைப்படங்களை பதிவு செய்து வரும் நிலையில் சற்றுமுன் ரோகிணி கேரக்டரில் நடித்து வரும் சல்மா அருண் தனது குடும்ப புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ரோகினி கேரக்டரில் நடிக்கும் நடிகை சல்மாவின் கணவர் பெயர் அருண் என்பதும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு திருமணம் நடந்த நிலையில் இந்த தம்பதிக்கு ஆரவ் என்ற மகன் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ’சிறகடிக்க ஆசை’ சீரியலில் ரோகிணி கேரக்டருக்கு இருக்கும் மகன் போலவே சல்மா அருண் உண்மையான மகனும் இருப்பதாக பலர் இந்த புகைப்படத்திற்கு கமெண்ட் பதிவு செய்து வருகின்றனர்.



சற்றுமுன் சல்மா அருண் தனது கணவர் மற்றும் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

இந்த பதிவுக்கு சல்மா அருண் ‘சேதுபதி’ படத்தில் இடம்பெற்ற பாடலை பின்னணியாக பதிவு செய்துள்ளார். அதில் உள்ள வரிகள் அவர்களுடைய வாழ்க்கையின் பிரதிபலிப்பாக பார்க்கப்படுகிறது. அந்த வரிகள் இதோ:

பக்கம் நீ இருந்தாபோதும் தூக்கம் போச்சு

வரப்போகும் துக்கம் எல்லாம் தூள் தூளாச்சு

உன்னால உலகம் அழகாச்சு

Advertisement

Advertisement