• Mar 31 2025

’தக்லைஃப்’ படத்தில் நடிக்க சிம்பு போட்ட கண்டிஷன்.. கடுப்பான கமல் எடுத்த அதிரடி முடிவு..!

Sivalingam / 1 year ago

Advertisement

Listen News!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ’தக்லைஃப்’ படத்தில் திடீரென ஜெயம் ரவி மற்றும் துல்கர் சல்மான் ஆகிய இருவரும் விலகிவிட்ட நிலையில் தற்போது இந்த இருவருக்கும் மாற்று நடிகர்களை தேடுவதில் மணிரத்னம் பிஸியாக உள்ளார்.

ஏற்கனவே துல்கர் சல்மான் நடிக்க இருந்த கேரக்டரில் நிவின் பாலி நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் தற்போது ஜெயம் ரவி நடிக்க இருந்த கேரக்டரில் நடிக்க சிம்புவிடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்ததாகவும் சிம்புவும் அதற்கு ஒப்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தான் நடிக்கும் கேரக்டரை விரிவாக கேட்ட சிம்பு, தன்னுடைய கேரக்டரின் பகுதி மிகவும் குறைவாக இருப்பதாகவும் இன்னும் சில காட்சிகள் அதிகப்படுத்தினால் மட்டுமே என்னால் நடிக்க முடியும் என்று சிம்பு, மணிரத்னம் இடம் கூறியிருப்பதாக தெரிகிறது.



ஏற்கனவே ’தக்லைஃப்’ படத்தில் சிம்பு வேண்டாம் என்று கமல் மணிரத்னத்திடம் கூறியிருந்த நிலையில் தற்போது சிம்பு போட்ட கண்டிஷனை கேட்டு கடுப்பாகிவிட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து ’தக்லைஃப்’ படத்தில் சிம்பு வேண்டாம் என்று கூறியதோடு ’எஸ்டிஆர் 48’ படத்தையும் இழுத்தடிக்க கமல்ஹாசன் முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

’எஸ்டிஆர் 48’படத்தை முடித்து தரும் வரை சிம்பு வேறு படத்தில் நடிக்க முடியாத அளவுக்கு அக்ரிமெண்ட் இருப்பதால் சிம்பு தற்போது என்ன செய்வது என்று தெரியாமல் திணறி வருவதாக கூறப்படுகிறது. சிம்பு நடித்த ’பத்து தல’ என்ற படம் வெளியாகி ஒரு ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு கூட ஆரம்பமாகவில்லை என்ற நிலையில் அவரது போட்டியாளரான தனுஷ் அடுத்தடுத்து படங்களை வெளியிட்டு வருவது சிம்பு ரசிகர்களுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தத்தில் கமல் மனது வைத்தால் மட்டுமே சிம்புவின் அடுத்த படம் வரும் என்பதால் கமல், சிம்பு இடையே மனக்கசப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

Advertisement

Advertisement