• May 05 2024

"சொன்ன மாதிரி நீ பழி வாங்கிட்டாய் திவ்யா"... அர்ணவ் கூறியதைக் கேட்டு ஷாக்கான ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்புடன் பேசப்பட்டடு வரும் விடயம் என்றால் அது சீரியல் நடிகர் அர்ணவ்-திவ்யாவின் குடும்ப பிரச்சனை தான்.

அதாவது தனது கணவரான அர்ணவ் தான் கர்ப்பமாக இருந்தும் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருந்துகொண்டு  தன்னை தாக்கி விட்டதாக கூறி போலீஸில் புகார் கொடுத்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார் திவ்ய.


இது தொடர்பாக அர்ணவ் கூறுகையில் "தான் அப்பிடி எதுவும் செய்வில்லை" என்று சொல்லி இருந்தார். இவ்வாறு இருக்கையில் திவ்யா கொடுத்த புகாரின் அடிப்படையில் அர்ணவ் மீது  கொலை மிரட்டல், மற்றும் வன்புணர்வு  உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.


இவ்வாறு இருக்கையில் அர்ணவை விசாரனைக்கு ஆஜராகுமாறு பலமுறை போலீஸாரால் அழைக்கப்பட்டும் அவர் ஆஜராகாமல் இருந்தார். இதனால் மீளவும் சம்மன் அனுப்பி இருந்தனர் போலீஸார். இந்நிலையில் நேற்றைய தினம் விசாரணைக்கு ஆஜராகி இருக்க வேண்டிய  அர்ணவ் ஆஜராகவில்லை.


இதனைத் தொடர்ந்து அவரது வழக்கறிஞர் போலீஸ் நிலையத்திற்கு வந்து "அர்ணவிற்கு கண்ணில் பிரச்சனை இருப்பதால் அவர் மருத்துவமனையில் இருக்கிறார் என்றும் அவரால் ஆஜராக முடியாது" என்றும் கூறி இருந்தார்.

ஆனால் அர்ணவிற்கு உண்மையில் எதுவும் நடக்கவில்லை என்றும் அவர் வைத்தியசாலையில் இருக்கவில்லை என்றும் போலீஸிக்கு தெரிய வர அவர்கள் உடனியாக விரைந்து சென்று அர்ணவ்வை கைது செய்துள்ளனர்.


இந்நிலையில் கைது செய்யப்பட்ட அர்ணவ் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் "தான் தவறு எதுவுமே செய்யவில்லை எனவும், உண்மை ஒரு நாள் வெளிச்சத்திற்கு வரும் எனவும், நீதி நேர்மைக்காக நான் கண்டிப்பாக போராடுவேன் எனவும்" கூறி இருக்கின்றார். 

அதுமட்டுமல்லாது "திவ்யா நீ பழிவாங்கணும் என்று சொன்னாய், இப்போ பழி வாங்கிட்டாய், இப்போ உனக்கு சந்தோஷமா" எனவும் கூறி சென்றிருக்கின்றார் அர்ணவ். அவர் இப்படி கூறி இருப்பது பலருக்கும் ஆச்சர்யத்தை தூண்டி இருக்கின்றது.

அத்தோடு "அர்ணவ் உண்மையிலும் தப்பு செய்யவில்லையா" என்ற சந்தேகங்களும் எழத் தொடங்கியிருக்கின்றது. எது எவ்வாறாயினும் யார் மேல் தப்பு என்பதனை சற்றுப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement

Advertisement