• May 09 2024

சீரியல் நடிகை பல்லவி தற்கொலை : காதலரிடம் திரும்பிய விசாரணை..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகை பல்லவியின் மறைவு அவரது சக நடிகர்களையும் , நண்பர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நடிகை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவருடைய காதலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.

மேலும் 'மோன் மனே நா' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கதாநாயகியாக நடித்தவர் பெங்காலி நடிகை பல்லவி டே. இவர் கொல்கத்தாவில் கர்ஃபாவிலுள்ள குடியிருப்பில் வசித்து வந்துள்ளார். நேற்று காலை, அவரது வீட்டுக்கதவு நீண்ட நேரமாகியும் திறக்கப்படாததால், சந்தேகம் அடைந்து வீட்டு கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மின் விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார் பல்லவி.

இந்நிலையில் பல்லவின் தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இந்த சம்பவம் அவரது சக நடிகர்களையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. நடிகை பல்லவியும், அவரது காதலர் சாக்னிக் சக்ரவர்த்தியும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர். பல்லவியின் தற்கொலையை அடுத்து, சாக்னிக் சக்ரவர்த்தியிடம் போலீஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அப்போது, பல்லவிக்கும் எனக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அந்த நேரத்தில் நான் வீட்டில் இல்லை என்றும் தெரிவித்துள்ளர். மேலும், சாக்னிக்கின் பெற்றோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது சாக்னிக்கின் தாயார், அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்தனர். மேலும் இதில், எங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும், இவர்கள் விரும்பியதால் ஒன்றாக இருக்க அனுமதித்தோம்.

அவர்கள் இருவருக்கும் இடையே, பெரிய பிரச்சனை எதுவும் இல்லை. என்ன நடந்தது. எதற்காக பல்லவி தற்கொலை செய்து கொண்டார் என்பது எனக்குத் தெரியவில்லை என்று தெரிவித்துள்ளனர். பல்லவியின் தற்கொலை குறித்து, அவருடன் சீரியலில் நடித்த சக நடிகரிடம் போலீசார் விசாரணையை துவங்கியுள்ளனர். மேலும், பல்லவியின் நெருங்கி நண்பர்களிடம், சாக்னிக் சக்ரவர்த்தியின் நடவடிக்கை குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/kDpbkFdEuYc

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement