• May 10 2024

”ஆடி வெள்ளி... எப்பொழுதும் காப்பாய் காமாட்சி”-தனியாக கோயிலுக்குச் சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் தனுஷ் சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்., “18 ஆண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்த இவர்கள் இருவரும் விவாகரத்துப் பெறப்போவதாக அண்மையில் அறிவித்திருந்தனர்.

அந்த அறிவிப்பில் , “18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.

இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் குறிப்பிட்டிருந்தனர்.

அதன் பிறகு தனுஷ் - ஐஸ்வர்யா இருவருமே தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளதோடு இருவரும் தற்போது தங்களது மகன்களுடன் தனித்தனியாக நேரத்தை செலவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று ஆடி வெள்ளியை முன்னிட்டு காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலுக்குச் சென்ற ஐஸ்வர்யா ரஜினிகாந்த், ”ஆடி வெள்ளி… எப்பொழுதும் காப்பாய் காமாட்சி” என்று குறிப்பிட்டு அந்தப் படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement