• Apr 19 2024

பரத் நடிப்பில் வெளியான மிரள் திரைப்படத்தின் திரைவிமர்சனம்

stella / 1 year ago

Advertisement

Listen News!


இயக்குநர் சக்தி வேல் இயக்கத்தில் பரத், வாணி போஜன், கே.எஸ். ரவிக்குமார்,  ராஜ்குமார் உள்ளிட்டோர்  நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகியிருந்த திரைப்படம் தான் மிரள். குடும்பப் பின்னணியில் ஹாரர் கலந்து எடுக்கப்பட்ட இத்திரைப்படத்தின் கதைக்களம் என்னவென்று பார்ப்போம்.


கதைக் களம்

காதல் திருமணம் செய்து கொண்டு பரத் -  வாணி போஜன் ஆகியோர் மகனுடன் வாழ்ந்து வருகின்றனர்.  ஒரு நாள் தன் கணவரையும்,  தன்னையும் மர்ம நபர் ஒருவர் கொல்வது போன்ற கனவு வாணி போஜனுக்கு வருகிறது.  மேலும் அவர்களை சுற்றி நடக்கும் சில சம்பவங்கள் அச்சத்தை ஏற்படுத்துகின்றன.இந்த நிலையில் அவர்கள் மூவரும் குலதெய்வம் வழிபாட்டிற்காக சொந்த ஊர் புறப்படுகின்றனர்.அதற்குப் பிறகு நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து மிரள் படத்தை எடுத்துள்ளார் இயக்குநர். 


குலதெய்வ வழிபாடு முடிந்து தொழில் காரணமாக இல்லம் திரும்ப பரத் முடிவெடுக்கிறார்.குடும்பத்துடன் அந்த ஊரில் இருந்து புறப்பட்ட பின், ஒரு காட்டில் மாட்டிக் கொள்கின்றனர்.அவர்கள் மூவரையும் வாணிபோஜன் கனவில்  வந்த மர்ம நபர் கொல்ல முயற்சிக்கிறார். அது யார்? எதற்காக பரத் குடும்பத்தை கொல்ல நினைக்கிறார்? பரத் அதிலிருந்து எப்படி தப்பிக்கின்றாரா இல்லையா என்பதையே இப்படம் எடுத்துக் கூறியுள்ளது.

படம் பற்றிய அலசல்

இந்தப் படத்தின் தொடக்கம் நல்ல வகையிலேயே அமைந்துள்ளது.  குறைந்த நபர்கள்,  அவர்களை சுற்றி நடக்கும் மர்மங்கள் என முதல் பாதி நகர்கிறது.  ஆனால் இரண்டாம் பாதியில் கதையை நகர்த்திய விதம் சற்று தொய்வை கொடுக்கிறது. ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில், நடு இரவில் தன் குடும்பத்துடன் மாட்டிக் கொண்டு தவிக்கும் பரத் பேசும் வசனங்கள் படத்திற்கு வலு சேர்க்கவில்லை. ஒரே வசனத்தை மீண்டும் மீண்டும் பேசுவது போல உள்ளது.


இதில் நடித்த பரத், வாணி போஜன், கே.எஸ்.ரவிகுமார் ஆகியோரின் நடிப்பு நன்றாக உள்ளது. மிரள் திரைப்படத்தில் இடம்பெறும் சில காட்சிகள் பார்ப்பவர்களை பயமுறுத்தும். ஆனால் அந்த பயம் படம் நெடுகிலும் இடம்பெறாமல் போனது படத்தின் பலவீனம். இருந்தாலும் இதில் வரும் திகில் சம்பவங்கள் ஏன் நடந்தன என்பதை ஒரு மெசேஜ் சொல்லி முடித்துள்ளார் இயக்குநர்.அத்தோடு பரத்தின் கெரியரில் இது நல்ல படமாக காணப்படுகின்றது. இதனால் இப்படத்தை பார்க்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement