பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ப்ரோமோ தற்பொழுது வெளியாகியுள்ளது. அதில், மயில் மீனாவைப் பார்த்து எனக்கு வாந்தி இன்னும் நிற்கவே இல்ல என்கிறார். மேலும், மயக்கம் வாற மாதிரி இருக்கு என்கிறார் மயில். அதைக் கேட்ட மீனா நாங்க ஹாஸ்பிடல் போய் செக் பண்ணிட்டு வருவோம் என்று சொல்லுறார்.

ஹாஸ்பிடலில செக் பண்ண போது டாக்டர் மயில் கர்ப்பமாக இருக்கிறார் என்று சொன்னதைக் கேட்ட மயில் சந்தோஷம் தாங்க முடியாமல் அழுகிறார். பின் மயில் சரவணன் கிட்ட தான் கர்ப்பமாக இருக்கிறதை சொல்லுறார்.
அதைக் கேட்ட சரவணன் யாரோட குழந்தை என்று கேட்கிறார். மேலும், அந்தக் குழந்தைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்ல என்கிறார் சரவணன். அதைக் கேட்ட மயில் ஷாக் ஆகுறார். இதுதான் இனிநிகழவிருப்பது...
Listen News!