பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, செந்தில் மீனா தன்னை ஒழிப்பிவிடல என்று சொல்லி போன் எடுத்து பேசிக்கொண்டிருக்கிறார். அதுக்கு மீனா எனக்கு நிறைய வேலை இருக்கு போனை கட் பண்ணுங்க என்கிறார். மறுபக்கம் மயில் சாப்பிடாமல் சரவணனை நினைத்து அழுதுகொண்டிருக்கிறார். மேலும் தான் மாமா வீட்டுக்குப் போகணும் என்கிறார். அதைக் கேட்ட பாக்கியம் மயிலைப் பேசுறார்.

அதனை அடுத்து சரவணன் அனுப்பின டிவோர்ஸ் நோட்டீஸை மயில் பார்த்து கதறி அழுகிறார். மேலும் அவர் சும்மா எல்லாம் சொல்லல உண்மையாவே டிவோர்ஸ் நோட்டீஸ் அனுப்பிவைச்சிட்டார் என்கிறார். அதைக் கேட்ட பாக்கியம் அவங்களும் தான் என்ர மகளை ஏமாத்திட்டாங்க.. அவங்க கேட்ட உடனே டிவோர்ஸ் கொடுக்கணுமா என்று கேட்கிறார்.
அதனை அடுத்து, கதிர் தான் கொஞ்ச நாளைக்கு கடைக்கு வந்து வேலையை பார்க்கிறேன் என்கிறார். மேலும் டெலிவரி எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என்கிறார். பின் சரவணன் டிவோர்ஸ் நோட்டீஸ் மயிலுக்கு அனுப்பிட்டேன் என்ற விஷயத்தை பாண்டியனுக்கு சொல்லுறார். அதைக் கேட்ட கதிர் அண்ணா அவசரப்பட்டு முடிவெடுக்காத என்கிறார்.

பின் பாண்டியன் உனக்கு என்ன தோணுதோ அதை செய் நான் கூட இருக்கிறேன் என்கிறார். மறுபக்கம் பாக்கியம் பொலிஸ் ஸ்டேஷனுக்குப் போய் என்ர பொண்ணை துரத்திவிட்டுட்டாங்க என்று அழுது கொண்டே கம்பிளைன்ட் கொடுக்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.
Listen News!