• May 03 2024

7வருட கால நண்பியை மறுமணம் செய்த சரத்குமார்... அவரே பகிர்ந்த தகவல்...!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகையாக அறிமுகமாகியவர் தான் ராதிகா. இவர் 80களில் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர். இப்போது குணச்சித்திர வேடங்களில் பல திரைப்படங்களில் நடித்து வருகின்றார்.


இவரைப் போலவே சரத்குமாரும் தமிழ் சினிமாவில் உள்ள உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வருபவர். இவர்கள் இருவரும் 2001-ஆம் ஆண்டு நடிகர் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதியினருக்கு கடந்த 2004ஆம் ஆண்டு ராகுல் எனும் ஒரு மகன் பிறந்தான்.


ராதிகாவினை திருமணம் செய்து கொள்வதற்கு முன்னதாக சரத்குமார் சாயா என்பவரை முதன் முதலாக திருமணம் செய்துக் கொண்டார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். சாயா-சரத்குமார் தம்பதியினருக்குப் பிறந்த மகள் தான் நடிகை வரலட்சுமி. இவர் பிறந்து சிறிது காலத்திலேயே இவரின் தாய், தந்தை பிரிந்து விட்டனர். இதன் பின்னர் தான் சரத்குமார் ராதிகாவை திருமணம் செய்து கொண்டார்.


இந்நிலையில் நடிகர் சரத்குமார் ராதிகாவுடனான நட்பு மற்றும் காதல் குறித்து சமீபத்தில் இடம்பெற்ற பேட்டி ஒன்றில் மனம் திறந்து பேசியிருக்கிறார். அதாவது அவர் கூறுகையில் "எல்லோர் வாழ்க்கையிலும் நிறைய கஷ்டங்கள் இருக்கு, நான் ஒரு நடிகனாக இருக்கும் போது எனக்கு நடந்த காதல் சம்பவங்கள் குறித்த கதைகளை எல்லாம் ராதிகாவிடம் சொல்லியிருக்கிறேன் ஆனால் அந்த சமயத்தில் அவரே எனக்கு மனைவியாக வருவார் என்று நான் கொஞ்சமும் நினைக்கவில்லை" என்றார்.


மேலும் "நானும் ராதிகாவும் 7ஆண்டுகளாக நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறோம். அப்போது ஒருநாள் அரவிந்த சாமி எங்களிடம் எனக்கு தெரியாமல் கல்யாணமா? எனக் கேட்டு கடுப்பாகியிருக்கின்றார். நான் என் கடந்த காலம் குறித்து நிறைய விடயங்களை ராதிகாவிடம் திருமணத்திற்கு முன்பே பகிர்ந்திருக்கின்றேன்" எனவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது திருமணமான பிறகு நானும் ராதிகாவும் கடந்த காலத்தைப் பற்றிபேசிக் கொள்வதே இல்லை எனவும் கூறியுள்ளார் நடிகர் சரத்குமார்.

Advertisement

Advertisement

Advertisement