• Apr 28 2024

சமூக வலைத்தளங்களில் இருந்து ஒதுங்கி இருக்கும் சமந்தா…காரணம் இதுதானா..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வெற்றிக் கொடி நாட்டி வருபவர் நடிகை சமந்தா. இவருடைய நடிப்பிலும், அழகிலும், சிரிப்பிலும் மயங்காதவர் யாருமில்லை என்று கூற முடியும். அந்தளவிற்கு தன்னுடைய கொள்ளை அழகினால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்து வருகின்றார்.

திரையுலகில் காலடி எடுத்து வைத்த நாள் முதல் இன்றுவரை பல மொழிகளிலும் பல படங்களில் நடித்து வருகின்றார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக 'காத்து வாக்குல ரெண்டு காதல்' என்ற படத்தில் நடித்திருக்கின்றார். இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தெலுங்கில் 'யசோதா', 'சகுந்தலம்' ஆகிய படங்களில் நடித்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது விஜய் நிர்வாணா இயக்கி வரும் 'குஷி' என்ற படத்திலும் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக நடித்து வருகின்றார்.

இவ்வாறாக படங்களில் ஓய்வில்லாமல் நடித்து வருகின்ற நடிகை சமந்தா சமூக வலைத்தளங்களிலும் எப்போதும் ஆக்டிவாக இருக்கின்ற ஒருவர். இவர் அடிக்கடி இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு வருவது வழக்கம். ஆனால் சமீபகாலமாக சமந்தா இன்ஸ்டாகிராம் பக்கமே வரவில்லை. அதாவது குறிப்பாக ஜூலை மாதம் முழுவதும் இன்ஸ்டாகிராம் பக்கமே வரவில்லையாம். அத்தோடு ட்விட்டர் பக்கம் வராமல் விட்டும் 10 நாட்களுக்கு மேலாகின்றது. இது ரசிகர்களுக்கு சந்தேகத்தை எழுப்பி உள்ளது. இதற்கு காரணம் சமந்தா செய்த ஒரு காரியம் தான் எனவும் கூறி வருகின்றனர்.

அதாவது சமந்தாவின் முன்னாள் கணவரான நாக சைதன்யாவும், நடிகை சோபிதா துலிபாலாவும் காதலிப்பதாக சமீபத்தில் ஒரு தகவல் சோஷியல் மீடியாக்களில் தீயாக பரவி இருக்கின்றது. நாக சைதன்யாவின் பெயரைக் கெடுக்கும் நோக்கில் இதனை சமந்தா தான் பரப்பி இருக்கின்றார் என்றும் ஒரு தகவல் வெளியாகி இருந்தது. இதனால் ரசிகர்களின் விமர்சனத்திற்கு ஆளாகியிருந்தார் சமந்தா.

இந்நிலையில் அந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்டதன் காரணமாகத் தான் சமூக வலைத்தளங்களில் இருந்து சமந்தா தற்போது ஒதுங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement