• May 11 2024

விஜய் என்னிடம் நடந்துகொண்ட விதம்- பிரபல பாலிவுட் நடிகை கூறிய தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் நடிகர் விஜய். அனல் பறக்கும் சண்டைக்காட்சிகளில் நடித்து ஆக்ரோஷமாக வசனங்கள் பேசி நடிப்பதில் வல்லவர். ஆனால் திரைக்கு பின்னால் விஜய் முற்றிலும் மாறுபட்ட மனிதராகவே இருக்கின்றார்.மேலும் சாந்தமாக அவ்வளவாக பேசாமல் புன்னகை ஒன்றையே பதிலாக தரும் விஜய் எப்போதும் அமைதியாகவே இருப்பார்.

மேலும் அவரின் இந்த குணம் அனைவரையும் ஆச்சர்யப்பட செய்கின்றது. இந்தியளவில் முன்னணி நடிகராக திகழும் விஜய் எளிமையாக எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இருப்பது அனைவர்க்கும் வியப்பாக உள்ளது. இந்நிலையில் தற்போது எந்த ஒரு நட்சத்திரமாக இருந்தாலும் அவர்கள் கலந்துகொள்ளும் பேட்டிகளில் நடிகர் விஜய்யை பற்றிய கேள்வி இடம்பெறுவது வழக்கமான ஒன்றாக மாறிவிட்ட்டது.

அதைப்போல பாலிவுட் திரையுலகில் பிரபல நாயகியாக வலம் வரும் கத்ரினா கைப் சமீபத்தில் ஒரு பேட்டியில் பங்கேற்றார். அப்போது அவரிடம் தளபதி விஜய்யைப் பற்றி கேள்வி கேட்கப்பட்டது. மேலும் அதற்கு கத்ரினா கைப், விஜய்யுடன் நான் ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளேன்.

அந்த விளம்பர படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தது. மேலும் அப்போது நான் ஒரு நாற்காலியில் அமர்ந்துகொண்டு மொபைல் போனை பார்த்துக்கொண்டிருந்தேன்.அத்தோடு எனக்கு அருகில் ஒரு ஷூ கால்கள் இருந்தன.

ஆனால் அதை நான் கவனிக்காமல் தொடர்ந்து மொபைலை பார்த்துக்கொண்டிருந்தேன்.மேலும் சிறிது நேரம் கழித்து நான் நிமிர்ந்து பார்த்தபோது தான் தெரிந்தது எனக்கு அருகில் நடிகர் விஜய் நின்றுகொண்டிருந்தார்.அவர் எனக்கு பை சொல்ல வந்திருக்கின்றார்.

மேலும் அப்போது நான் மொபைல் பார்த்துக்கொண்டு இருந்ததால் என்னை தொந்தரவு செய்யவேண்டாம் என எண்ணி விஜய் எனக்காக காத்துக்கொண்டிருந்தார்.எனினும் இந்த நிகழ்வை என்னால் மறக்கவே முடியாது.முலமு் ஒரு சூப்பர்ஸ்டார் அந்தஸ்தில் இருக்கும் விஜய் இவ்வளவு எளிமையாக இருப்பது எனக்கு வியப்பாக உள்ளது என்றார் கத்ரினா கைப். இந்நிலையில் விஜய் தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement