• Jun 03 2025

தாய் பாசத்தில் ஜெயித்த ரோகிணி.. கிரிஷ் கேட்ட கேள்வி? திடீர் திருப்பத்தில் சிறகடிக்க ஆசை

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் என்ன நடக்கும் என்பதற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில் மனோஜ், கிரிஷ், ரோகினி படுத்திருக்க க்ரிஷ் எழுந்து ஏன் கூட கதைக்கல அத்தை ? என்று ரோகினியிடம் கேட்க, மனோஜ் திடீரென எழுந்து என்ன இது என்று கேட்கிறார். ஆனாலும் இது கனவு என நினைத்து எழுந்து இருக்கிறார் ரோகிணி. அதற்குப் பிறகு கிரிஷை சென்று பார்க்கும் போது அவர் முத்து மீனாவுடன் தூங்கிக் கொண்டிருக்கின்றார்.

அதன் பிறகு ரோகிணி தனது அம்மாவிடம் எதற்காக இங்கு வந்த என பேச, கிரிஷை பார்த்த தானே அவன் கண்ணால ரத்தம் கொட்டிச்சு..நீ பெத்த பிள்ளை தானே கிரிஷ்.. அவன பத்தி மட்டும் ஏன் யோசிக்க மாட்டேன் என்கிறாய் என்று பேச, அவன் மேல் எனக்கு அக்கறை இருக்காதா? கிரிஷ் நான் பெத்த பிள்ளை என்று ரோகிணி கலங்குகிறார்.


இதனை பின்னால் இருந்து கிரிஷ் கேட்டு விடுகிறார். அதன் பிறகு நீ தான் என்னோட அம்மாவா? நீ தான் என் அம்மாவா அத்தை என்று கேட்க, ரோகிணி அதனை தவிர்க்க முடியாமல் நான் தான் உன் அம்மா என்று கிரிஷை கட்டிப்பிடித்து கொஞ்சுகிறார்.

இவ்வாறு சிறகடிக்க ஆசை சீரியல் தற்போது பரபரப்பான திருப்பத்தில் திரும்பி உள்ளது. எனவே தனது அம்மா தான் ரோகிணி என கிரிஷுக்கு தெரிய வந்த நிலையில், இந்த விஷயம் முத்து மீனாவுக்கு தெரிய வருமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Advertisement

Advertisement