• May 19 2024

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஆர்.கே.நகர் திரைப்படம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் வெளியான கோவா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் வைபவ். இவர் தெலுங்கு பட இயக்குனர் ஏ.கோதண்டராமன் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சினிமாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் வைபவின் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகவுள்ளது.

மேலும் இப்படத்தை திரு சரவண ராஜன் இயக்கியுள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படத்தில் நடிகை சனா அல்தாப் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகை அஞ்சனா கீர்த்தி, நடிகர் சம்பத்ராஜ் இனிகோ, பிரபாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தின் கதை தனது அன்றாட பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செய்ய கடும் சிரமப்படும் ஒரு இளைஞனின் வாழ்க்கையை சுற்றி பின்னப்பட்டிருக்கிறது. ஒரு அரசியல்வாதியின் மகள் மீது இந்த இளைஞன் காதலில் விழும் போது அவனது வாழ்க்கை ஒரு சிறப்பான திருப்பத்தை நோக்கி நகர்கிறது. ஆனால் மகிழ்ச்சி நீண்ட காலம் இல்லை.

இவ்வாறு ஒரு கொலை வழக்கில் மாட்டுகிறார். அவர் அப்போது கதை சூடு பிடிக்கிறது. இவ்வாறு காமெடியாகவும் திரில்லர் இலும் உருவாகியுள்ள இத்திரைப்படம் குறித்து இயக்குநர் சரவண ராஜன் பேசுகையில் கலர்ஸ் தமிழ் போன்ற மிகப் பிரபலமான சேனலில் எனது திரைப்படம் ஒளிபரப்பப்டுவது எனக்கு பெருமகிழ்ச்சி. இத்திரைப்படம் மிகப்பெரிய அளவில் பார்வையாளர்களை சென்றடைவது அவர்களுக்குப் பிடித்த திரைக்காவியம் ஆக இருக்கும் என்று நான் நம்புகிறேன்.

இதன் கதாபாத்திரங்கள் கதை மற்றும் திரைப்பட இசை ஆகிய அனைத்தும் ஒருங்கிணைந்து திரைப்படத்தை உயிரோட்டமானதாக்குவதில் வெற்றியடைந்து இருக்கின்றன.

பிரேம்ஜியின் பின்னணி இசை இத்திரைப்படத்திற்கு அதிக வலு சேர்க்கிறது. திரைப்படத்தின் மூலம் வரும் ஞாயிறு குதூகலமான நாளாக அமையும் என்று நான் நம்புகிறேன். திரைப்படத்தை உருவாக்க நாங்கள் எடுத்த சிறப்பான முயற்சிகள் பாராட்டப்படும் என்று நான் கருதுகிறேன் என்று கூறியுள்ளார்.

அந்த வகையில் அதிரடி ஆக்ஷன் காட்சிகளும் வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை காட்சிகள் நிறைந்த ஆர் கே நகர் வருகின்ற ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கலர்ஸ் தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement