அபூர்வ ராகங்கள் என்னும் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இதனைத் தொடர்ந்து பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்த இவர் இறுதியாக சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த என்னும் திரைப்படத்தில் நடித்திருந்தார்.
இதனை அடுத்து தனது 169வது படமான ஜெயிலர் படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. இப்படத்தை பீஸ்ட் பட இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகின்றார் என்பதும் முக்கியமாகும்.
இந்த நிலையில் ரஜினி குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ரஜினி தனது பெற்றோர் வாழ்ந்த கிராமத்தில் அவர்களுக்கு மார்பளவு சிலையைஅமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன
நாச்சிக்குப்பம் என்னும் கிராமத்தில் ரஜினியின் பெற்றோர் வாழ்ந்து வந்ததாகவும், தற்போது சேதமடைந்த நிலையில் இருக்கும் ரஜினியின் பூர்வீக வீட்டை இடித்து, அங்கே பெற்றோருக்கு மண்டபம் அமைக்கும் பணிகளில் ரஜினி இறங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
தன்னுடைய பெற்றோர் வாழ்ந்த இடத்தில், அவர்களுக்கு சிலை வைக்க வேண்டும் என்பது ரஜினியின் நெடுநாள் விருப்பமாக இருந்ததாகவும் அதனை தற்போது அவர் பூர்த்தி செய்துவிட்டதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் இருந்து வெளியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், விரைவில் தனது பெற்றோருக்கு ரஜினி நினைவுமண்டபம் கட்ட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இது அவரது ரசிகர்கள் உட்பட பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.
Listen News!