• Apr 26 2024

தீபாவின் திருமணத்தை நிறுத்த ராஜ ஸ்ரீ செய்யும் சூழ்ச்சி -கனவு காணும் கார்த்திக்- கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஷுதமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் புத்தம் புதிய சீரியல் கார்த்திகை தீபம்.இந்த சீரியலில் இன்று என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

 மீண்டும் திருமணம் செய்து கொள்வதாக வந்த மாப்பிள்ளையிடம் இந்த திருமணத்தில் எனக்கு சம்மதம் இல்லை. அதனால் நீங்க அம்மா அப்பா பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று தீபா சொல்ல அனைவரும் ஃபீல் செய்கின்றனர்.

அதன் பின்னர் அந்த மாப்பிள்ளை இந்த மாதிரி பெண் வீட்டுக்கு மருமகளாக வர எங்க அம்மாவுக்கு கொடுத்து வைக்கவில்லை என்று கூறிவிட்டு போகிறார். அடுத்து கார்த்திக் வீட்டில் கார்த்திக் கோயில் பாடிய பெண்ணின் குரலை கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறான்.

அப்போது ஐஸ்வர்யா தன் கணவன் அருணிடம் கார்த்திக்குக்கு தன் சொந்தக்காரப் பெண்ணை திருமணம் செய்து வைக்கலாம் என்று கூற அருண் அம்மாக்கு பிடித்திருந்தால் ஓகே என்று சொல்கிறான். அதன் பின்னர் தீபா வீட்டில் அப்பா வாசலில் உட்கார்ந்து இருக்க அனைவரும் காலை கோயிலில் கச்சேரி பாடியதும் ரூபஸ்ரீயின் குரலை பற்றி பெருமையாக பேச அப்பா உள்ளே வந்து பீல் பண்ணுவது என்னுடைய பெண்ணின் குரல் இன்னொரு பொண்ணுக்கு பேசுவதாக சொல்ல ஃபீல் செய்கிறார்.

மேலும் இப்படியான நிலையில் ஐஸ்வர்யா ராஜஸ்ரீக்கு ஃபோன் செய்து கச்சேரி நடைபெற்றதாக கூற  ராஜஸ்ரீ சந்தோசம் ராஜஸ்ரீ தீபா வீட்டுக்கு வந்து நாளை பெரிய வீட்டில் கச்சேரி ரெடியா இரு என்று கூறிவிட்டு போய் வெளியே வந்து அண்ணியிடம் பணம் கொடுத்து தீபாவுக்கு எந்த திருமணம் நடக்க கூடாது நீ தான் பார்த்துக்கணும் என்று கூறிவிட்டு போக அண்ணியும் சரி என்று சொல்கிறாள்.

 மறுநாள் காலை அபிராமி வீட்டில் அருண், ஆனந்த் என இருவரும் பங்ஷனுக்கான ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்க தீபா வீட்டில் இருந்து புறப்பட அப்போது ஒருவர் வந்து உங்க பெண் அரண்மனை வீட்டில் மருமகளாக போறாள், ராஜகுமாரன் மாப்பிள்ளையா வரப்போறான் என்று கூற அனைவரும் சந்தோஷமடைகின்றனர். அடுத்து நடக்கப் போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும்.


Advertisement

Advertisement

Advertisement