• May 19 2024

பாக்கியாவைத் திட்டிக் கொண்டே இருந்த கோபிக்கு ராதிகா கொடுத்த அதிர்ச்சி-புதிய பிரச்சினையில் மாட்டிய இனியா- Baakiyalakshmi Serial

stella / 8 months ago

Advertisement

Listen News!


விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

ஒருவழியாக ஈஸ்வரியைக் கணடுபிடித்ததும் இனியா கோபிக்கு போன் பண்ணி பாட்டி கிடைத்து விட்டதாக சொல்ல, கோபி பாக்கியாவிடம் போனைக் கொடுக்க சொல்கின்றார். பாக்கியா போனை வாங்கி காதுக்குள் வைக்க கோபி பாக்கியாவை திட்டுகின்றார். மரியாதையாக இனியாவையும் அம்மாவையும் கூட்டிட்டு வந்திரு இல்லை என்றால் நடக்கிறதே வேற என்று சொல்ல பாக்கியா போனை வைக்கின்றார்.


தொடர்ந்து கான்டீனில் அமிர்தா, நிலாவுடன் போய் நிற்கின்றார். அப்போது அங்கு வரும் ராதிகா பாக்கியா எங்கே என்று கேட்கும் போது, அவங்க வேலையாக ஊருக்க போய்ட்டாங்க இன்னும் 2,3 நாள்ல வந்திருவா என்று சொல்ல, ராதிகா குழுந்தைகளை எதுக்கு கூட்டிட்டு வாறீங்க.அடுப்பெல்லாம் இருக்கு இங்க குழந்தைகளை கொண்டு வரக்கூடாது என்று சொல்கின்றார்.

அந்த நேரம் பார்த்து ராமமூர்த்தி வந்து நிலாவை தான் பார்த்துக்கொள்வதாகச் சொல்லி அழைத்துச் செல்கின்றார். தொடர்ந்து பாக்கியா, ஈஸ்வரியிடம் கொஞ்ச நேரத்தில பயந்திட்டோம் அத்தை என்று சொல்ல ஈஸ்வரி சமாளிக்கின்றார். பின்னர் கோபி போன் பண்ணி நலம் விசாரிப்பதோடு வீட்டுக்கு சீக்கிரம் வாங்க என்று சொல்கின்றார்.


அப்போது ஈஸ்வரி நீ மட்டும் இனியாவை கூட்டிட்டு போயிருந்தால் இது எல்லாம் ஆயிருக்குமா உன்னால தான் இப்பிடி ஆச்சு, எதுக்கு நீ பாக்கியாவுக்கு போன் பண்ணித் திட்டிட்டே இருக்கிற என்று ஈஸ்வரி கோபியை பேசிவிட்டு போனை வைக்கின்றார். இதனால் கடுப்பான கோபி ராதிகாவைத் தேடி கான்டீனுக்குப் போய் விஷயத்தைச் சொல்கின்றார்.

இதனைக் கேட்டுக் கெண்டிருந்த ராமமூர்த்தி போற இடத்தில முன்னபின்ன தான் ஆகும். அதான் கிடைச்சிட்டாள் தானே அப்பிறம் என்ன என்று திட்ட, பதிலுக்கு கோபியும் நீங்க பாக்கியா சொல்லுறதையே கேளுங்க அவ மட்டும் என் அம்மாவையும் பொண்ணையும் கூட்டிட்டு வராவிட்டால் நானே போய் கூட்டிட்டு வரவேண்டி இருக்கும் என்று சொல்கின்றார்.


அப்போது கடுப்பான ராதிகா போறது என்றால் அப்பிடியே போயிடுங்க, இது என்ன ஆபிஸ் இங்க வந்து எதுக்கு சத்தம் போடுறீங்க என கோபியை திட்டி அனுப்புகின்றார். பின்னர் பாக்கியாவுக்கு போன் பண்ணி அமிர்தா என்ன ஆச்சு என்று கேட்க பாக்கியா நடந்த விஷயத்தைச் சொல்லிக் கொண்டிருக்கின்றார். மபுறம் கடைக்கு போன இனியாவை சில ஆண்கள் மறித்து பயமுறுத்துகின்றனர். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement