பிரபல தொலைக்காட்சி சேனலான விஜய் டீவியில் சில ஆண்டுகளுக்கு முன் ஒளிப்பரப்பாகி முடிந்த சீரியல்களில் ஒன்று 'சரவணன் மீனாட்சி'. இந்த சீரியலின் இரண்டாம் சீசனில் மீனாட்சியாக நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ரச்சிதா மகாலட்சுமி. இந்த சீரியலில் கிடைத்த வரவேற்பால் தொடர்ந்து பல சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பினை பெற்றார்.
அதுமட்டுமல்லாது சமீபத்தில் 'நாம் இருவர் நமக்கு இருவர்' என்ற சீரியலில் நடித்து வந்த ரச்சிதா தொலைக்காட்சி சேனலில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாகவும் சினிமா வாய்ப்பின் காரணத்திற்காகவும் அந்த சீரியலில் இருந்து விலகினார். அதன்பின் வேறொரு தொலைக்காட்சிக்கு தாவிய ரச்சிதா 'சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் நடித்து வருகிறார்.
ரச்சிதாவின் குடும்ப வாழ்க்கையை எடுத்து நோக்கின் இவர் சில ஆண்டுகளுக்கு முன் தினேஷ் என்ற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு சில ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்து வந்த இவர்கள் இருவருக்கும் இடையில் சண்டைகள் ஏற்பட்டதால் தற்போது தனித்தனியாக வாழ்ந்து வருகிறார்கள்.
விரைவில் இருவரும் விவாகரத்து பெறப்போவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகி வந்த நிலையில், தினேஷ் அப்படியான முடிவை இன்னும் எடுக்கவில்லை என்று கூறினார்.
இந்நிலையில் யாருமே எதிர்பார்க்காத வகையில் ரச்சிதா திடீரென பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாளராக களமிறங்கியுள்ளார். இதுவரை ஹோம்லி கேர்ள்-ஆக இருந்து வந்த ரச்சிதா பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போகும் முன் கிளாமர் ஆட்டம் போட்ட வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துவிட்டு சென்றுள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் ஷாக்காகி வருகிறார்கள். ஏனெனில் இதுவரை காலமும் குடும்ப குத்து விளக்காக இருந்து வந்தவர் தற்போது இவ்வாறான கிளாமர் வீடியோவை பகிர்ந்துள்ளமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
Listen News!