• May 18 2024

ஒரு காலை மேல் தூக்கி நின்று பரதநாட்டியத்தில் சும்மா அசத்திய நடிகை இந்திரஜா-ஷாக்கான ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் சினிமா பயணத்தை ஆரம்பித்தவர் தான் நடிகர் ரோபோ ஷங்கர். இதனைத் தொடர்ந்து தற்பொழுது பிஸியான நடிகராக பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

இது தவிர விஜயட டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களிலும் பங்குபற்றி வருகின்றார். இவரது மகளான இந்திரஜா தமிழில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகியிருந்த பிகில் திரைப்படத்தில் பாண்டியம்மா எனும் கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.


இதனைத் தொடர்ந்து ஷு தமிழில் ஒளிபரப்பாகிய சர்வைவர் நிகழ்ச்சியிலும் பங்குபற்றி வந்தார்..மேலும், சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்த விருமன் திரைப்படத்தில் அதிதி ஷங்கரின் தோழியாக நடித்திருந்தார்

இந்நிலையில், நடிகை இந்திரஜா ஷங்கர் பரதநாட்டியம் ஆடி அனைவரையும் அசரவைத்துள்ளார்.அதுமட்டுமின்றி ஒரு காலை மேல் தூக்கி நிற்கும் புகைப்படத்தையும் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் இந்திரஜா. 


இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் தமது லைக்குகளை அள்ளிக் குவித்து வருவதோடு பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பதும் முக்கியமாகும்.


Advertisement

Advertisement