விஜய் டீவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகள் யாவுமே மக்கள் மத்தியில் பிரபலமானவை தான். எனினும் அதிக ரசிகர்கள் கூட்டத்தைக் கொண்ட நிகழ்ச்சி என்றால் அது பிக்பாஸ் தான். 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட இந்த நிகழ்ச்சியானது தற்போது ஆறாவது சீசனை தொட்டுள்ளது.
அதாவது கமலஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்த நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர். ஒன்பது ஆண்கள், 10 பெண்கள், ஒரு திருநங்கை களமிறக்கப்பட்டுள்ளனர். இந்த வாரத்தில் முதல் இரண்டு நாட்கள் மிகவும் மகிழ்ச்சியாக சென்றாலும் அடுத்தடுத்த நாட்களில் விறுவிறுப்பான போட்டி ஆரம்பித்துவிட்டது.
அந்தவகையில் சண்டைகள், சச்சரவுகள் என அதகளப்ப்படுத்தி வருகிறது பிக்பாஸ் நிகழ்ச்சி. இதில் ஜிபி முத்து மற்றும் தனலட்சுமியின் சண்டைதான் தற்போது அதிக ரசிகர்களை ஈர்த்து வருகிறது என்று கூறலாம். அதற்கிடையே ஒரே வாரத்தில் காதல் கிசுகிசுவும் எழுந்து விட்டது.
அதாவது ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவை காதல் பார்வை நிறைந்த கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவும் அதனால் தான் ரச்சிதா தற்போது எல்லாம் சேலையணிந்து நெற்றியில் பொட்டு வைத்தபடி இருக்கிறார் என்றும் கூறப்பட்டது. அதேபோல ராம் -மகேஸ்வரி குறித்தும் பல கிசுகிசுகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் நடிகரும் சினிமா விமர்சகருமான பபயில்வான் ரங்கநாதன் தற்போது பிக்பாஸ் 6 குறித்து பேசிய விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அதாவது ரச்சிதாவுக்கு ராபர்ட் நூல் விட்டதை அறிந்த ரச்சிதா அவரிடம் இருந்து ஒதுங்கி விட்டதாக கூறி இருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது மகேஸ்வரி, ராமை காதல் கண்ணோட்டத்தில் பார்ப்பதாகவும், படுக்கையில் இருந்தபடியே ராமிடம் நெருங்கி பேசும் மகேஸ்வரி தன்னை பற்றி என்ன நினைப்பதாக அவரிடம் கேட்டுள்ளமை மகேஸ்வரிக்கு ராம் மீது உள்ள காதலையே உணர்த்தி நிற்கின்றது.
இவ்வாறாக தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் காதல் துளிர்விட ஆரம்பித்து விட்டதாக புதிய தீப்பொறி ஒன்றை கொளுத்தி போட்டு உள்ளார் நம்ம பயில்வான் ரங்கநாதன்.
Listen News!