பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக ஒரு வாரத்தை கடக்க உள்ளது. இதில் போட்டியாளர்களிடையே நாளுக்கு நாள் சண்டை, கோபம், அழுகை என உணர்ச்சிகளும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.
இந்நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் பங்குபற்றிய நிலையில், அதில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத போட்டியாளராக இருப்பவர் தனலட்சுமி. இவரிற்கும் சக போட்டியாளரான ஜிபி முத்துவிற்கும் இடையில் சில சில கருத்து வேறுபாடுகள் நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கிறது. அதாவது இவர் ஜிபி முத்துவை நடிக்காதீங்க என்று சொன்னதால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.
அந்நிகழ்ச்சியில் ஜாலியாக சிரித்து ஆடிப்பாடிக்கொண்டிருந்த ஜிபி முத்து நான் நடிக்கவில்லை எனக் கூறி அழுதார். இதையடுத்து அனைவரும் ஜிபி முத்துவை சமாதானம் செய்தனர். ஜிபிமுத்து கண்ணீர் விட்டதை பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள் தனலட்சுமியை கண்டபடி திட்டித் தீர்த்து வருகின்றனர்.
மேலும் நேற்றைய எபிசோடில், ஜிபி முத்துவிடம் தனலட்சுமி சண்டை போட்டது குறித்து பேசிய வெஷல் கிளீனிங் டீம் லீடரான ஜனனி "பெரியவர்கள் வயதானவர்கள் அனைவரும் இந்த வீட்டில் இருக்கிறார்கள்.
இதில் வயதில் பெரியவர்கள் வா.. போ என்று பேசுவது தப்பான விஷயம் இல்லை. இதை பற்றி பெரிதாக நாம் எடுத்துக் கொள்ளவும் தேவையில்லை. இது ஒன்றும் ரீல்ஸ் இல்லை இதனால், தனலட்சுமியை ஸ்வாப் செய்கிறேன்" எனக் கூறியிருந்தார் ஜனனி.
இந்த விவகாரமானது கொழுந்து விட்டு எரியத் தொடங்கிய நேரத்தில் எப்போடா நம்ம ஆண்டவர் வந்து இதை எல்லாம் தட்டிக் கேட்பாரு என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள். இந்த நேரத்தில் தற்போது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.
அதில் கடந்த 5 சீசனிலும் இல்லாத ஒரு அதிரடி ஆரம்பம் ஆக இந்த சீசன் நடந்து வருவதாகவும், 40 நாட்களில் நடக்க வேண்டிய கலாட்டாக்கள் எல்லாம் இப்பவே ஆரம்பமாகி இருப்பதாகவும், விசாரிப்பதற்கும் கேட்பதற்கும் நிறைய கேள்விகள் இருக்கின்றன எனவும் கூறியிருக்கின்றார் நம்ம ஆண்டவர்.
இவர் கூறியிருப்பது ஜிபி முத்து, தனலட்சுமி விவகாரத்தை பற்றித்தான் என ரசிகர்கள் கூறி வருகின்றார்கள். பொறுத்திருந்து பார்ப்போம் இன்றைய எபிசோட்டில் என்னதான் நடக்கு என்று.
Listen News!