பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6ஆவது சீசன் ஆனது கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது வெற்றிகரமாக ஒரு வாரத்தை கடக்க உள்ளது.
இதில் ஒரு குடும்பம் போன்று உள் நுழைந்த போட்டியாளர்களிடையே நாளுக்கு நாள் சண்டை, கோபம், அழுகை, சிரிப்பு என அனைத்து உணர்ச்சிகளும் அதிகரித்த வண்ணமே இருக்கின்றன.
இந்தா சீசனில் 20 போட்டியாளர்கள் பங்குபற்றிய நிலையில், இதில் உள்ள ஒவ்வொரு போட்டியாளர்களும் பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர்களாக இருந்து வருகின்றனர்.
இதில் தனலட்சுமிக்கும் இவரின் சக போட்டியாளரான ஜிபி முத்துவிற்கும் இடையில் சில சில கருத்து வேறுபாடுகள் அடிக்கடி நிகழ்ந்த வண்ணம் தான் இருக்கிறது. அதாவது இவர் ஜிபி முத்துவை நடிக்காதீங்க என்று சொன்னதால் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது
இந்த விவகாரமானது கொழுந்து விட்டு எரியத் தொடங்கிய நேரத்தில் எப்போடா நம்ம ஆண்டவர் வந்து இதை எல்லாம் தட்டிக் கேட்பாரு என்று ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்த வண்ணம் இருக்கின்றார்கள்.
இந்நிலையில் இன்றைய ப்ரோமோவில் "கடந்த 5 சீசனிலும் இல்லாத ஒரு அதிரடி ஆரம்பம் ஆக இந்த சீசன் நடந்து வருவதாகவும், 40 நாட்களில் நடக்க வேண்டிய கலாட்டாக்கள் எல்லாம் இப்பவே ஆரம்பமாகி இருப்பதாகவும், விசாரிப்பதற்கும் கேட்பதற்கும் நிறைய கேள்விகள் இருக்கின்றன எனவும் கூறியிருக்கின்றார் நம்ம ஆண்டவர்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் மென்மேலும் எதிர்பார்ப்புக்கள் கிளம்பத் தொடங்கிய நிலையில் தற்போது அடுத்த ப்ரோமோவும் வெளியாகி இருக்கிறது.
அதில் ஆண்டவர் போட்டியாளர்களை ஒவ்வொருவராக கலாய்த்து இருக்கின்றார். அதாவது சாந்தியை பார்த்து "ஏமாந்தீங்க என்றால் உங்களுக்கே உப்புமா கொடுத்திடுவாங்க" எனவும், மகேஸ்வரியை பார்த்து "என்ன அடிக்கடி முட்டிக்கிறீங்க போலிருக்கு" எனவும் கூறியிருக்கின்றார்.
அதுமட்டுமல்லாது ஜிபி முத்துக்கு பாதாமை கொடுத்து விட்டு "பாதாம் தெரியுது உங்களுக்கு ஆதாம் தெரியலயா, அவர் எவ்வளவு வருத்தப்படுகின்றார் தெரியுமா" எனக் கிண்டலாக கேட்கின்றார். அதற்கு ஜிபி முத்து "ஆதாமா அவரு எங்க இருக்காரு" என வெகுளித்தனமாக கேட்கின்றார். இதனைப் பார்த்து சுற்றியிருந்தவர்கள் யாவருமே விழுந்து விழுந்து சிரிக்கின்றனர்.
Listen News!