• May 03 2024

ஓணம் பண்டிகையை 'ஐகா' உடன் கொண்டாடும் பிரியங்கா... யார் அந்த ஐகா..? வெளியான தகவல்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு சாதாரண தொகுப்பாளராக அறிமுகமான பிரியங்கா தேஷ்பாண்டே இன்றைக்கு சின்னக் குழந்தையில் இருந்து வயதானவர்கள் வரை அனைவரினதும் ஃபேவரைட் ஆங்கராக மாறி இருக்கின்றார்.


இவரின் கிண்டல், மற்றும் கேலி நிறைந்த பேச்சுக்களும், மற்றவர்கள் மீதான அவரின் வேடிக்கையான அணுகுமுறையும் தான் அவரை இப்படியான ஒரு உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்று சேர்ந்திருக்கின்றது.  


அதிலும் குறிப்பாக இவரும் மா.கா.பா ஆனந்தும் இணைந்து நடாத்தும் நிகழ்ச்சிகளுக்கு என்று ஒரு பெரிய ரசிகர் கூட்டம் உண்டு. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் சூப்பர் சிங்கர். பாட்டு நிகழ்ச்சியையே நகைச்சுவை நிகழ்ச்சி போன்று கொண்டு நடாத்துகின்ற திறமை இவருக்கு உண்டு. 


நிகழ்ச்சிகளை பொறுத்தவரையில் குறிப்பாக தொகுப்பாளர்கள் தான் போட்டியாளர்களை கலாய்ப்பார்கள். ஆனால் ஒரு தொகுப்பாளரையே போட்டியாளர்கள் கலாய்க்கின்றார்கள் என்றால் அது நம்ம பிரியங்காவை மட்டும் தான். அந்தளவிற்கு அனைத்து நிகழ்வுகளையும் மனக்கசப்பின்றி நடாத்துகின்ற திறமை இவருக்கு உண்டு.


விஜய் டீவியின் சொத்தான பிரியங்கா அதே சேனலில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான நிகழ்ச்சியான 'பிக்பாஸ்' ஐந்தாவது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராகவும் கலந்து கொண்டார்.அத்தோடு இந்த சீசனின் டைட்டில் வின்னராக ராஜுவும், இரண்டாம் இடத்தை பிரியங்காவும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறாக விஜய் டீவியில் கடந்த 10 வருடங்கள் தொகுப்பாளினியாக பணிபுரிந்து வருகின்ற பிரியங்காவிற்கு ஒரு சகோதரன் உண்டு. அவருக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்திருந்தது. அக்குழந்தையின் புகைப்படங்களை பிரியங்கா சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருந்தார்.


இந்நிலையில் இன்றைய தினம் பல பிரபலங்களும் ஓணம் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். அப்புகைப்படங்களை தமது சமூக வலைத்தள பக்கங்களிலும் பகிர்ந்து வருகின்றனர்.

அந்தவகையில் நம்ம பிரியங்காவும் தனது தாய், சகோதரன் மற்றும் சகோதரனின் குழந்தையோடு இணைந்து புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.


அதுமட்டுமல்லாது "வெல்கம் மை  ஹோம் ஐகா கண்ணா" எனவும் குறிப்பிட்டிருக்கின்றார். இதனைப் பார்த்த ரசிகர்கள் 'ஐகா" தான் குழந்தைக்கு பெயரா எனக்கேட்டு தமது கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement