• May 06 2024

லவ் யூ குட்டு..தனது காதலனை அறிமுகம் செய்து வைத்த கனா காணும் காலங்கள் சீரியல் நடிகை- குவியும் வாழ்த்துக்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

திருச்சியைச் சேர்ந்த சீரியல் நடிகையாக வலம் வருபவர் தான் பிரணிகா. இவர் டிக்டாக் மூலம் பிரபல்யமானதை அடுத்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார். அதன் வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாவம் கணேசன் சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகினார்.

இதனைத் தொடர்ந்து ஷு தமிழிலும் சீரியல்களில் நடித்து வருகின்றார்.இருப்பினும் தற்பொழுதும் நண்பர்களுடன் சேர்ந்து டிக்டாக் செய்து வருகின்றார். சீரியலில் நடித்துக் கொண்டிருந்த போதே ‘காமெடி ராஜா கலக்கல் ராணி’ என்ற ரியாலிட்டி ஷோவிலும் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சின்னத்திரை நடிகர் வினோத் பாபு உடன் ஜோடி சேர்ந்தார். 


இந்த ஷோவில் டான்ஸ், காமெடி, என கலக்கினார்.அதுமட்டுமில்லை பிரணிகா வெள்ளித்திரையிலும் கால் பதித்துள்ளார். எங்கள் பாட்டன் சொத்து படத்தில் இரண்டாவது கதாநாயகியாகவும், வடசேரி படத்திலும் நடித்துள்ளார். இப்போது ஓடிடியில் ஒளிப்பரப்பாகும் கனா காணும் காலங்கள், மாரி சீரியல்களில் பிஸியாக நடித்து வருகிறார்.


 இந்நிலையில் 2 தினங்களுக்கு முன்பு பிரணிகா தனது இன்ஸ்டாவில் நீண்ட நாள் காதலனை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்துள்ளார். இதற்கு முன்பு பலமுறை நவநீத் ராஜனுடன் டிக் செய்து செய்து, ரிலீஸ் செய்து பல வீடியோக்கள், புகைப்படங்களை பிரணிகா வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement