• Mar 23 2025

இலங்கை கிரிக்கெட் வீரரைச் சந்தித்த பிரபல நடிகர்...! இணையத்தை அலறவைத்த க்ளிக்ஸ்!

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடம் நீண்ட காலமாக இடத்தைப் பெற்ற நடிகர் ஜெயம் ரவி, தற்போது “பராசக்தி” என்ற புதிய திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இலங்கையில் நடைபெற்று வருகின்றது. இதன் போது இலங்கையின் முன்னாள் புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான சனத் ஜெயசூர்யாவை சந்தித்து அவருடன்  ஜெயம் ரவி எடுத்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகின்றது.

“பராசக்தி” படம் கலைஞர் கருணாநிதி எழுதிய 1952ஆம் ஆண்டு வெளிவந்த படத்தின் பெயரிலேயே மீண்டும் உருவாகியுள்ளது.இம்முறை, “பராசக்தி” புதிய பரிமாணத்தில் உருவாகும் ஒரு அரசியல் உணர்ச்சிகரமான படமாக இருக்கலாம் எனக் கூறப்படுகின்றது. இதில் ஜெயம் ரவியின் கதாபாத்திரம் மிகவும் வலிமையானதாகவும், சமூகத்துடன் நெருக்கமாக தொடர்புடையதாகவும் அமைந்திருக்கின்றது.


படத்தின் முக்கியக் காட்சிகள் தற்போது இலங்கையில் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த நாட்டின் அழகிய பசுமை மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் திரைப்படத்திற்கு சிறப்பு அம்சமாக இருக்கும் எனக் கூறப்படுகின்றது.

மேலும் சிறந்த ஆளுமை உடைய சனத் ஜெயசூர்யாவை நேரில் சந்தித்த ஜெயம் ரவி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்தப் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் இருவரும் மிகவும் சந்தோஷமாகக் காணப்படுகின்றார்கள்.


Advertisement

Advertisement