மணிரத்னத்தின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள திரைப்படமே 'பொன்னியின் செல்வன்'. இவரின் கனவு திரைப்படமான இப்படமானது செப்டெம்பர் 30-ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகி இன்றுவரை வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
திரைப்பிரபலங்கள் பலரும் நடித்துள்ள இப்படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தியும், குந்தவையாக த்ரிஷாவும், ஆதித்த கரிகாலனாக சியான் விக்ரமும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும், பெரிய பழுவேட்டயராக சரத்குமாரும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும், நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜும், ஆழ்வார்கடியான் நம்பியாக ஜெயராமும் நடித்து அசத்தியிருந்தனர்.
மிகப்பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவான இப்படமானது தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆனது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு, மற்றும் சிறந்த விமர்சனங்களும் கிடைத்த வண்ணமே இருக்கின்றன.
தமிழகர்கள் கொண்டாடி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்படமானது வெளியான முதல் நாளே படம் ரூ. 80 கோடி வசூலித்து சாதனை செய்தது. வெளிநாடுகளிலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அடுத்தடுத்த நாட்களிலும் நல்ல வசூல் வேட்டை தான் நிகழ்த்தி வருகின்றது.
இந்நிலையில் நேற்று படம் ரூ. 400 கோடி வரை வசூலித்துவிட்டதாக லைகா ஒரு வீடியோ வெளியிட்டார்கள். அதனைத் தொடர்ந்து படம் ரிலீஸ் ஆகி 13 நாட்களில் உலகம் முழுவதும் ரூ. 430 கோடி வரை வசூலித்துவிட்டதாம். அதுமட்டுமல்லாது விரைவில் ரூ. 500 கோடியை எட்டும் எனவும் கூறி வருகின்றனர்.
Listen News!