• May 05 2024

வசூலில் மிரள வைக்கும் 'பொன்னியின் செல்வன்'.. வெறும் 5 நாட்களில் உலகம் முழுவதும் இத்தனை கோடி காலெக்ஷனா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விக்ரம், ஜெயம் ரவி, த்ரிஷா, கார்த்தி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்  ஒன்றாக நடித்து வெளியாகிய திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இப்படத்தை பிரமாண்ட இயக்குநர் மணிரத்னம் இயக்கியிருந்தார்.

 பிரபல எழுத்தாளர் கல்கி சோழ மன்னர்களை பற்றிய வரலாற்றை, புனையப்பட்ட கதையாக எழுதிய நாவல் தான் 'பொன்னியின் செல்வன்' இப்படத்தின் பட்ஜெட் காரணமாக இந்த படத்தின் பணிகள் தாமதமாகிக்கொண்டே சென்ற நிலையில், ஒரு வழியாக 500 கோடி பட்ஜெட்டில் உருவாக்கியுள்ளார் மணிரத்னம்.


இந்த படத்தில் சில குறைகள் இருந்தாலும், 5 பாகம் கொண்ட நாவலை ஒரு படமாக எடுப்பது அசாதாரணமான விஷயம். ஆனால் அதனை முடிந்தவரை சிறப்பாக செய்துள்ளார் மணிரத்னம் என நினைக்கும் போது இந்த சிறு குறைகள் கூட பெரிதாக தெரியவில்லை என்றே கூறலாம்.

இந்நிலையில், உலகளவில் பொன்னியின் செல்வன் திரைப்படம் கடந்த ஐந்து நாட்களில் சுமார் ரூ. 270 கோடி வரை உலகளவில் வசூல் செய்துள்ளது.விரைவில் ரூ. 500 கோடியை பொன்னியின் செல்வன் எட்டும் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் வர உள்ளதால்... வசூல் அதிகரிக்கும் என கூறப்படுகிறது. 


Advertisement

Advertisement

Advertisement