• May 19 2024

கல்யாணம் மட்டும் பண்ணிடாதிங்க- ஆர்யா பட தயாரிப்பாளர் நயன்தாராவுக்கு போட்ட அக்ரிமெண்ட்- எதனால் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா. பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் சோலோ ஹீரோயினாக நடித்தும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்துக் கொண்டதோடு தனது விடா முயற்சியினால் உச்சந் தொட்டுள்ளார்.

20 வருட சினிமா வாழ்க்கையில் இவரைப் போல எந்த நடிகையும் துன்பங்களை அனுபவிக்கவில்லை எனலாம். மேலும் இந்த ஆண்டு தனது காதலன் விக்னேஷ் சிவனைக் கரம் பிடித்த இவர் ஹனிமூன் கொண்டாட அடிக்கடி வெளிநாடு சென்று வருகின்றார். இதனால் இவர் புதிய படங்கள் எதிலும் கமிட்டாகவில்லை.


திருமணத்திற்கு முதல் கமிட்டான ஜவான் படத்தில் மாத்திரம் நடித்து வருகின்றார். இப்படத்தை இயக்குநர் அட்லி இயக்குகின்றார் என்பதோடு இப்படம் தற்போது தமிழ் , ஹிந்தி போன்ற மொழிகளில் படமாக்கப்பட்டு ருகின்றது என்பதும் முக்கியமாகும்.

இந்த நிலையில் இவர் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகி வருகின்றது. அதாவது இவர் திருமணம் செய்த முதல் ஏழு வருடங்களாக விக்னேஷ் சிவனை காதலித்து வந்ததால் எப்பொழுதும் திருமணம் செய்து கொள்வார் என்ற பயம் அவரை வைத்து படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் மத்தியில் இருந்து வந்தது. ஏனெனில் திடீரென படம் நடித்துக் கொண்டிருக்கும் போதே திருமணம் நடந்தால் தயாரிப்பாளர்களுக்கு தான் இழப்பு.


அந்த வகையில் பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் நடிக்க அவரை அந்த பட தயாரிப்பாளர் ஸ்ரீநிவாசன் அணுகும் போது கூடவே ஒரு அக்ரிமெண்டையும் சேர்த்து காட்டியிருக்கிறார். அதில் படம் முடியும் வரை நீங்கள் திருமணம் செய்து கொள்ள கூடாது என்று எழுதியிருந்ததாம். அதை பார்த்ததும் நயன் சிரித்து விட்டு இது தான் சரி, இப்படி தான் இருக்க வேண்டும். நான் ஒரு தயாரிப்பாளராக இருந்தால் இதை தான் பண்ணியிருப்பேன் என்று கூறி கையெழுத்தை போட்டாராம் நயன். இந்த தகவல் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement