• Jul 12 2026

இவ்வளவு புகழா தளபதிக்கு? இன்டர்நேஷனல் லெவலுக்கு போய்ட்டார் போலயே.! வைரலாகும் போட்டோஸ்

shali / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக நீண்ட காலமாக திகழ்ந்து வருகிறார் தளபதி விஜய். இவர் தனது நடிப்பு மற்றும் நடனத்தால் ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டார். சமீபத்தில் விஜய் தொடர்பாக வெளியாகியுள்ள ஒரு புகைப்படம், சமூக வலைத்தளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அதாவது, சிங்கப்பூர் தூதரகத்தின் அதிகாரியான எட்கர் பாங் தளபதி விஜயை நேரில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீவிரமாக பரவி வருகின்றன. எட்கர் பாங், சிங்கப்பூர் குடியரசின் இந்திய தூதரகத்தில் (Singapore Consulate in India) முக்கிய அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். 


இந்த புகைப்படங்கள் வெளியாகியதும், #ThalapathyVijay, #EdgarPang, #SingaporeConsulate, #VijayInDiplomacy, போன்ற ஹாஷ்டாக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. பல ரசிகர்கள்,“நம்ம தளபதி இன்டர்நேஷனல் லெவலுக்கு போயிட்டாரு!” என கமெண்ட்ஸையும் தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement