• Jun 29 2025

கலைவித்தகர் கமல்.! – உலகநாயகனின் ஆஸ்கர் அழைப்பை பாராட்டிய பவன்கல்யாண்..!

subiththira / 5 hours ago

Advertisement

Listen News!

இந்திய சினிமாவின் உயரிய முகமாக திகழ்ந்து வரும் உலக நாயகன் கமல்ஹாசன், தற்போது ஒரு வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார். உலக அளவில் மிகச் சிறந்த சினிமா விருதாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதிற்கான தேர்வு குழுவில் (Academy Class of 2025) இணைவதற்கான அழைப்பை Academy of Motion Picture Arts and Sciences (AMPAS) அதிகாரபூர்வமாக கமல்ஹாசனுக்கு அனுப்பியுள்ளது.


இந்தச் செய்தி வெளிவந்ததிலிருந்து, இந்திய திரைத்துறை முழுமையான உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றது. ரசிகர்கள் மட்டுமல்லாமல், அரசியல், சமூக மற்றும் திரைத்துறையின் பிரமுகர்களும் கமலுக்கு பாராட்டுகளைக் கூறி வருகின்றனர்.

இந்த வருடம், உலகளாவிய அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இயக்குநர்களின் பட்டியலில் இந்தியாவிலிருந்து மிகச் சிலர் மட்டுமே இடம் பெற்றுள்ளனர், அதில் முக்கியமாக கமல்ஹாசன் இடம்பெற்றதே பெருமையாகும்.


இந்நிலையில், தெலுங்கு திரையுலக நடிகரும், தற்பொழுது ஆந்திர மாநிலத்தின் துணை-முதல்வருமான பவன் கல்யாண், தனது X தளத்தில் உருக்கமான வாழ்த்துப் பதிவை பகிர்ந்துள்ளார். அதன்போது, "ஆஸ்கர் விருதுக்கான குழுவில் கமல் தேர்வு செய்யப்பட்டது இந்திய திரையுலகிற்கே பெருமையான தருணம். கமல்ஹாசன் ஒரு நடிகர் என்பதை விட மேலானவர். அவரது புத்திசாலித்தனம் மற்றும் பன்முகத் திறமையின் மூலம் நடிகராக, கதைச்சொல்லியாக, இயக்குநராக இந்திய மற்றும் உலக சினிமாவில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார்.

சினிமாவின் ஒவ்வொரு அங்கத்திலும் அவர் செலுத்திய ஆதிக்கம், பலருக்கும் ஊக்கமாக அமைந்துள்ளது. அவர் உண்மையிலேயே கலையின் வித்தகர். மேலும் பல ஆண்டுகள் உலக சினிமாவுக்கு அவர் சேவையாற்ற மனதார வாழ்த்துகிறேன்." எனக் கூறியுள்ளார். 


Advertisement

Advertisement