• Oct 07 2024

இன்னும் ஒரு வாரத்தில் ‘டீன்ஸ்’ ரிலீஸ்.. திடீரென காவல் நிலையத்தில் புகார் அளித்த பார்த்திபன்..!

Sivalingam / 3 months ago

Advertisement

Listen News!


பார்த்திபன் இயக்கிய ‘டீன்ஸ்’ என்ற திரைப்படம் ஜூலை 12ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் திடீரென அவர் கோவை காவல் நிலையத்தில் இந்த படத்திற்கு கிராபிக்ஸ் பணிகள் செய்த சிவ பிரசாத் என்பவர் மீது புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முற்றிலும் புதுமுகங்கள் நடித்த ‘டீன்ஸ்’ என்ற திரைப்படத்தை இயக்குனர் பார்த்திபன் இயக்கி உள்ளார் என்பதும் அதுமட்டுமின்றி அவர் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த படம் கமல்ஹாசனின் ’இந்தியன் 2’ ரிலீஸ் ஆகும் அதே ஜூலை 12ஆம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டு அதற்கான பணிகளையும் அவர் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



இந்த நிலையில் திடீரென இயக்குனர் பார்த்திபன் கோவை காவல் நிலையத்தில் ‘டீன்ஸ்’ படத்திற்கு கிராபிக்ஸ் மேற்பார்வையாளராக செயல்பட்டு வந்த கோவையை சேர்ந்த சிவப்பிரசாத் என்பவர் மீது புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரில் ‘டீன்ஸ்’ படத்தின் கிராபிக்ஸ் பணிகளை பிப்ரவரி மாதமே முடித்து தருவதாக கூறி ரூபாய் ரூ.68.54 லட்சம் சிவபிரசாத் கேட்டதாகவும், அதற்கு ரூ.42 லட்சம் செலுத்திய நிலையிலும் அவர் இன்னும் பணிகளை முடித்து தரவில்லை என்றும் கூறியுள்ளார். இதனை அடுத்து கோவை போலீசார் சிவப்பிரசாத் மீது வழக்கு பதிவு செய்து அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement