• Nov 13 2025

செந்திலின் நீண்டநாள் போராட்டத்திற்கு கிடைத்த விடிவுகாலம்.. பாண்டியன் எடுத்த அதிரடி முடிவு

subiththira / 1 month ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் கடந்த நாட்களாக செந்தில் மீனாவை கூட்டிக் கொண்டு தனியாக இருக்கப் போவதாக கூறியதால் வீட்டில் இருந்த அனைவருக்கு சோகத்தில் இருந்தனர். இது இப்படியாக நடந்து கொண்டிருக்க தற்பொழுது இனி நிகழவிருக்கும் எபிசொட்டிற்கான promo வெளியாகியுள்ளது. 


அதில், செந்தில் தன்னுடைய புது வீட்டிற்கு வீட்டில இருக்கிற எல்லாரையும் அழைத்து பால் காய்ச்சத் தேவையான எல்லா வேலையையும் செய்து வைக்கிறார். அப்ப மீனா கோமதியை பார்த்து நீங்களே பாலை காய்ச்சுங்க என்று சொல்லுறார்.


அந்த நேரம் பார்த்து அங்க பாண்டியன் போய் நிற்கிறார். அதைப் பார்த்தவுடனே எல்லாரும் சந்தோசப்படுகிறார்கள். பின் எல்லாரும் ஒன்னா சேர்ந்து பால் காய்ச்சி குடிக்கிறார்கள். இப்படியாக நாளைய தினத்திற்கான promo வெளியாகி இல்லத்தரசிகளின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. 

Advertisement

Advertisement