மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படத்தை டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கியுள்ளார்.
இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். மேலும், மலையாள சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஜேக்ஸ் பிஜாய் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

‘பள்ளிச்சட்டம்பி’ திரைப்படம் கடந்த 15ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலிருந்தே இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றதாக கூறப்படுகிறது. குறிப்பாக, டொவினோ தாமஸின் நடிப்பு மற்றும் படத்தின் கதைக்களம் பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
இந்நிலையில், இந்த படம் வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது படத்தின் வெற்றியை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது.
விமர்சகர்களிடமும், ரசிகர்களிடமும் நேர்மையான கருத்துகளை பெற்றுள்ள ‘பள்ளிச்சட்டம்பி’, தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Listen News!