• Jul 04 2024

பாக்கியாவின் பிரச்சினையை ஒரே நிமிசத்தில் தவிடுபொடியாக்கிய பழனி! ஜெனிக்கு அடுத்த சிக்கல் ரெடி?

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடில், எல்லாரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்க, பாக்கியா வீட்டு பொறுப்பை ஜெனியிடம் சொல்லி இன்டைக்கு வீட்டை பார்த்துக் கொள்ளு, அமிர்தாவ நான் ரெஸ்டாரன்ட் கூட்டி போறேன் என சொல்லுகிறார்.

இதை தொடர்ந்து பாக்கியா ரெஸ்டாரண்டுக்கு பழனி வருகிறார். அவரிடம் செல்வி பார் விஷயத்தை சொல்லுமாறு சொல்ல, பாக்கியாவும் பக்கத்திலையே பார் திறந்திருப்பதால் இங்கே இருக்கிற பெண்கள் பயப்படுகிறார்கள் என்று சொன்னதும் பாக்கியாவையும் கூட்டிக்கொண்டு பார் கடை ஓனரிடம் பேசப்போகிறார் பழனி.

அங்கு அவர் போனில் சாப்பாடு விஷயமாக பேசிக் கொண்டிருக்க, பழனியிடம் சாப்பாடு ஓடர் கொடுத்து அவர்கள் சொதப்பி விட்டார்கள் என்று சொல்ல, பாக்கியாவுக்கு அந்த ஆர்டரை பெற்றுக் கொடுக்கிறார் பழனி.


அதன் பிறகு பார் கடை ஓனர் பாக்கியாவின் ரெஸ்டாரண்டுக்கு வந்து சாப்பாடு மெனுவை பார்த்து சாப்பாடு ஆர்டர் பண்ணிவிட்டு அதற்கு அட்வான்ஸ் கொடுக்கிறார். இதை தொடர்ந்து பாக்கியா வழமை போல பழனிக்கு நன்றி சொல்லி, நீங்க எப்பவும் என் கூட இருக்கணும் என்று சொல்ல, நான் எப்பவும் உங்க கூட தான் இருப்பேன் என்று சொல்லுகிறார் பழனி.

மறுபக்கம் ஜெனியின் குழந்தை அழுது கொண்டு இருக்க அங்கு பாக்கியா சொல்லி வந்த பெண்ணும் குழந்தையை பார்த்துக் கொள்கின்றார்கள். இடையில் ராமமூர்த்தி குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு வரவா என்று கேட்க, வேண்டாம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். அதன் பிறகு குழந்தையை தூங்க வைத்துவிட்டு ஜெனியும் தூங்கி விடுகிறார். ராமமூர்த்தியும் தூங்கி விடுகிறார். இதுதான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement